a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தமிழ்நியூஸ்வெப்
தீர்ப்பு
தூ
நெருப்பு
விழிப்பு
எங்கள் தேசம்
டெலோ நியூஸ் 

 பி.ஈ.ஓ.ரி.சுவிஸ் இலக்கிய இன்போ
 

Asian Truth

Asian Guardian

Asientribune

Independentsl

Lines-Magah;ine

Lanka Muslims

Srilankaguardian

Srilankanmic

Membres.Lycos

Tamilaffairs

Sldf

The lka academic

Tamil Week

Uthr

a_Thenee_head02

27.08.2008                                    Vol.8                                       Issue: 182

சிறிய குழுக்களாக கெரில்லாத் தாக்குதல்களுக்குத் தயாராகும் புலிகள்

-அர்ச்சுனன்

முன்னேறிவரும் படையினரை புலிகள் எதிர் கொண்டு மோதுவது தடுப்பதற்கு அல்ல,தாமதப்படுத்துவதற்கே?

praba-27எனது கடந்த கட்டுரை ஒன்றில் ,புலிகள் உயிலங்குளத்தில் ஊடறுத்து தாக்க வேண்டும் ,அதனை அவர் செய்யாது போனால் படையினர் பூனைகரி வரை சென்று பூனைகரி சங்குபிட்டி பாதையினை திறப்பதினை தடுக்க முடியாது போய்விடும் என கூறியிருந்தேன். மேலும் இந்திய படையினருடன் ஆன மோதலின் போது முல்லைதீவு காட்டிற்குள் தமது போராளிகளை உள்வாங்கியது போன்று தற்பொழுது அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு புலிகளின் தலைவர் தமது தளபதிகளுக்கு உத்தரவு இட்டிருக்க வேண்டும். அதற்கேற்ப முன்னேறும் படையினர் தடுப்பதற்கு அல்லாது தாமத படுத்துவதற்கு ஆங்காங்கே புலிகளின் போராளிகள் படையினருக்கு எதிர்ப்புக்களை காட்டி வருகின்றனர். ஆட்டிலறிகள் (artilleries, multi barrels guns)  பல்குழல் மோட்டார் போன்ற கனரக ஆயுதங்களை முல்லைதீவு காடுகளுக்குள் கடத்துவதற்கும், அந்த காடுகளின் நுழை வாசல்களில் மேலதிக பாதுகாப்பான பதுங்கு குழிகளை அமைப்பதற்கும் ஆன அவகாசத்தினை பெறும் பொருட்டே புலிகளின் போராளிகள் படையினருக்கு ஆங்காங்கே எதிர்ப்பினை காட்டி வருகின்றார்கள்.   விடத்தல் விடத்தல் தீவினை விடும் பொழுது முல்லைதீவு காட்டிற்குள் செல்வது என்கின்ற முடிவினை புலிகள் மேற்கொண்டுவிட்டார்கள். ஆயுத பற்றாக்குறை,ஆள்பற்றாக் குறை என்பனவெல்லாம் புலிகளுக்கு பெரும் பிரட்சனையாக போயிருக்கின்றது. பல பகுதிகளை மீட்டெடுத்தமை படையினருக்கு அதிக மனோபலத்தை கொடுத்திருப்பது ஒரு புறம் இருக்க, தமது உயிர்களை மதிக்காது இராணுவ தலமை தளபதி சரத்பொன்சேகாவும், பாதுகாப்பு செயலர் கோத்தாபயவும் அவ்வப்போது பறந்து சென்று போர்முனை தளபதிகளுக்கு கொடுக்கும் உத்வேகம் மறுபுறம் என படையினர் நன்றாக உசுபேத்தி விடப்பட்டிருக்கின்றார்கள். (மேலும்) 27. 08.08

__________________________________________________________________________________.

இலக்குத்தவறிய புலிகளின் தாக்குதல்: திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்

கடந்த மாதம் இத்தாக்குதல்களுக்காக புலிகள் முல்லைத்தீவில் அமைத்த புதிய விமான ஓடுபாதை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை கடற்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை இரவு 9.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கடற்படைத்தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் விடுதலைப்புலிகளின் விமானங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் அந்தத்தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் கூறியுள்ளது. தாக்குதலில் குறைந்தது நான்கு கடற்படையினர் காயமடைந்துள்ளதாக இராணுவ அமைச்சகத்தின் இணையதளம் கூறுகிறது. அதேவேளைஇ திருகோணமலை துறைமுகப் பகுதியில் ஒரு பெரிய குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அதனையடுத்து துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் பீரங்கி வேட்டுக்கள் ஆகியன தொடர்ந்து வெடித்ததாகவும் திருகோணமலை வாசிகள் கூறுகின்றனர். இந்தச் சம்பவத்தில் காயத்துக்கு இலக்கான கடற்படையினர் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலையடுத்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் விமானங்களை தேடியழிப்பதற்காக வன்னி பிரதேசத்துக்கு விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் சென்று வந்ததாக வடபகுதியிலிருக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப் படையின் இந்த வான்வழித் தாக்குதல்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. (மேலும்) 27. 08.08

__________________________________________________________________________________.

கிளிநொச்சி, முல்லைத்தீவைக் கைப்பற்றுவது இறுதித் தீர்வாகுமா? ஜெஹான் பெரேரா

slarmy-10சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் பெற்றிருக்கும் வெற்றியானது, அது தற்பொழுது முன்னெடுத்திருக்கும் இராணுவ ரீதியான நடவடிக்கை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டிநிற்பதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா, ஆங்கில ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கும் நோக்குடன் தற்போதைய களநிலைக்கு ஏற்றவாறு அரசாங்கம் தயாரித்த கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் மக்களாதரவு பெறப்பட்டுள்ளது என அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் இவ்வாறு போருக்கான ஆணையாகக் கருதப்பட்டு, தொடர்ச்சியான போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் பட்சத்தில் தாம் அரசாங்கத்தால் அடிமைகளாக நடத்தப்படலாம் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுவதாகவும் தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். என்ன விலை கொடுத்தாவது தாய்நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்கவேண்டும் என்ற அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையானது மக்களுடைய உணர்வுபூர்வமான ஆதரவை அரசாங்கத்துக்குப் பெற்றுக்கொள்வதில் மிகவும் வலிமையாக உள்ளது எனத் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஜெஹான் பெரேரா, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியை என்ன விலை கொடுத்தேனும் மீட்பதன்மூலம் அரசாங்கம் தனது வெற்றியை காட்ட முயல்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். . (மேலும்) 27. 08.08

__________________________________________________________________________________.

1990, THE YEAR OF ETHNIC CLEANSING OF THE MUSLIMS FROM THE NORTH AND THE EAST OF SRI LANKA. 

                                      S.M.M. BAZEER

karikaalanJuly 1883 was “Black July” for the Tamils of southern Sri Lanka, where Tamils were subject to persecution by the Sinhalese mobs with the connivance of the JR government. August 1990 was “Black August” for the Eastern Muslims of the East, where the LTTE massacred the Muslim worshippers in Kattankudy on 3rd August 1990 and sleeping villagers in Eravur on 11 August 1990. From time to time the LTTE continued their killing spree of the Muslims until the capturing of Mutur by the Sri Lankan Army in July 2006. In 1990 the LTTE intensified their attacks on Muslims with an objective of ethnic cleansing. In April 1992, the LTTE unleashed violence against the Muslims of Alinchipothanai and killed 69 Muslim villagers. This led to a retaliatory violence against the Tamils in Muthugala , where 49 Tamils were killed allegedly by the Muslim Home guards. On 15th October 1992 , the LTTE , attacked four border Muslim villages in the Polonnaruwa District, namely, Palliyagodalla, Akbarpuram, Ahmedpuram and Pangurana and butchered 187 Muslims including pregnant women. (Read) 27.08.08

__________________________________________________________________________________.

தம்மைத் தாமே அழித்துக்கொள்ளும் தமிழ் அரசியல்: ‘மனச்சாட்சியின் குரல்’ கண்காட்சி கண்முன நிறுத்திய உண்மை

- கனடாவில் இருந்து வைகுந்தன் -

call23ம் திகதி சனிக்கிழமை மாலை டொரண்டோ ரோய் தொம்சன் அரங்கில் நிகழ்ந்தேறிய “மனச்சாட்சியின் குரல்” கண்காட்சியானது தமிழ் சமூகத்தைப் பணயக் கைதிகளாக்கி வைத்திருக்கும் புலிகளின் அரசியல் தமிழ் சமூகத்தை எவ்வாறு சுய அழிவின் எல்லை வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துகாட்டியது. இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிக்கிறது என்று மட்டும் வெளிநாடுகளில் பரப்புரை செய்து வரும் புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் மூடி மறைக்க முயலும் பல உண்மைகள் இக்கண்காட்சி மூலம் கனேடிய சமூகத்தினரின் கண்களின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. 25க்கும் மேற்பட்ட பாரிய விளக்கப் பட அமைப்புக்களும் 6 விவரணக் குறுந் திரைப்படங்களையும் கொண்டிருந்த கண்காட்சியானது யுத்தத்தினால் இலங்கை மக்கள் படும் அவலங்களையும் பல கோணங்களிலிருந்தும் விபரித்திருந்தது. புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட துரோகி ஒழிப்பில் ஆரம்பித்து, புலிகளின் துணுக்காய் வதை முகாம், வெலிகடை, கந்தன் கருணை, மற்றும் பிந்துனுவௌ படுகொலைகள், முஸ்லிம் மக்கள் மீதான புலிகளின் வன்முறைகள், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் காணாமல் போதல்கள், யுத்த விதவைகள், சிறார்கள் படும் அவலம் என்னும் பல்வேறு அம்சங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.டோரன்டோவில் வாழும் தமிழர்கள், சிங்களவர்கள், முஸலீம்கள் உட்பட பல்வேறு இனத்தைச் சேர்ந்த கனேடியர்கள் உட்பட சுமார் முன்னூறு பேர்வரை கண்காட்சியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். கண்காட்சியன் பிரதான அமைப்பாளரான சுதந்திர பத்திரிகையாளர் எஸ். மனோரஞசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, மற்றும் தொழிற்சங்கச் செயற்பாட்டாளரான கெவின் சிமின் ஆகியோர் திறப்பு விழாவில் உரையாற்றினர். அவர்களின் உரைகளின் முழுவிபரத்தை பின்னிணைப்பில் பார்க்கவும். (மேலும்) 26. 08.08

__________________________________________________________________________________.

உணவு, மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு வன்னியில் மோசமாகியுள்ள மனிதாபிமானப் பிரச்சினை -உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு

இடம்பெயர்ந்துள்ள மக்கள் இலகுவில் எடுத்து செல்லக்கூடிய தற்காலிக தங்குமிட ஏற்பாடு - ஐ.சி.ஆர்.சி. தெரிவிப்பு

 red crossத்தியாவசிய உணவு, எரிபொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு நிலவிவரும் பாரிய தட்டுப்பாடு காரணமாக வன்னியில் மனிதாபிமான நிலை தொடர்ந்தும் மோசமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் 2 இலட்சத்து 17 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியு ள்ளது. உலகில் சுகாதாரம் தொடர்பான மனிதாபிமான பிரச்சினைகள் தோன்றியுள்ள நாடுகளில் உலக சுகாதார ஸ்தாபனம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. மேற்படி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் ஜோர்ஜியா, ஆபிரிக்கா, உகண்டா, சூடான், பெனின், குயினியா பிசேம், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் சுகாதாரத்துடன் தொடர்புடைய மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அவ்வறிக்கையில் இலங்கையின் மனிதாபிமான நிலை குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வன்னியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பு தேடி பல தடவைகள் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது. மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேச மக்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். அத்தியம்வசிய உணவுப் பொருட்கள் மற்றும் அடிப்படை மருந்துகள் மற்றும் எரிபொருட்களின் விநியோகத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. (மேலும்) 26. 08.08

__________________________________________________________________________________.

வன்னியிலிருந்து ஒருவர் கூட இன்றுவரை வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வரவில்லை: வன்னியை விட்டு வெளியேற வேண்டாமென புலிகள் மக்களுக்கு கடுமையான உத்தரவு

vaharai-makkalவன்னியில் இடம்பெறும் பாரிய படை நடவடிக்கையால் இடம் பெயரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வவுனியாவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவரென கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்ட போதும் இதுவரை எவருமே வரவில்லை. வன்னியில் பாரிய படை நடவடிக்கைகள் இடம்பெறும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இந்தப் படை நடவடிக்கையால் தற்போது ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மரங்களின் கீழும் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர். இந்தப் படை நடவடிக்கையால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வவுனியாவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவாரென எதிர்பார்க்கப்பட்டு அதற்கேற்ப, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து அரச அதிகாரிகள் பல்வேறு ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர். இடம்பெயர்ந்து வரும் அகதிகளைத் தற்காலிகமாகத் தங்க வைப்பதற்காக மூன்று இடங்களும் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலக புனர்வாழ்வுப் பிரிவின் திட்டப் பணிப்பாளர் திருமதி விஜயலெட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார். அரசின் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின் பேரில் இது தொடர்பான சில நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். எவ்வளவு எண்ணிக்கையானவர்கள் வருவார்கள் எப்போது வருவார்கள் என்ற விபரங்கள் எதுவுமே எமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார். வன்னியில் போர் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட அல்லது இடம்பெயர்ந்த பொதுமக்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வரும் பட்சத்தில் அவர்களுக்குரிய வசதிகளை செய்து கொடுக்க இங்குள்ள சர்வதேச தொண்டு நிறுவன மற்றும் நிவாரணப் பணியாளர்களும் வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாக அரச அதிகாரி ஒருவர் கூறினார். (மேலும்) 26. 08.08

__________________________________________________________________________________.

யாழ், கிழக்குப் பல்கலைகளிலுள்ள சிங்கள மாணவர்கள் தென்னிலங்கைக்கு இடமாற்றம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள சிங்கள, முஸ்லிம் மாணவர்கள், தென்னிலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை வந்தாறுமூலை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற சிங்கள மாணவர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்தே ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது."யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு சிங்கள மாணவர்களை அனுப்புவதில்லை என ஏற்கனவே தீர்மானித்திருந்தோம். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் சிங்கள மாணவர்களை அனுப்புவதில்லை எனத் தீர்மானித்திருக்கிறோம்" என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க தெரிவித்தார்."இது குறித்து உபவேந்தர்களுடனும், பீடாதிபதிகளுடனும் நாம் தொலைபேசி வழியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகிறோம். இந்தத் தேசியப் பிரச்சினைக்கு நாம் சரியான தீர்வினை வழங்கவேண்டும். பீடாதிபதிகளும் உபவேந்தர்களும் இதற்கு நல்ல பதிற்குறியை வழங்கியிருக்கிறார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.183 சிங்கள மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்த வருடம் தமது முதலாம் வருட கற்கைநெறிகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே, அவர்களை தென்னிலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. (மேலும்) 26. 08.08

__________________________________________________________________________________.

ஜே.வி.பியின் செல்வாக்கு படுமோசமாக வீழ்ச்சி: ஐ.ம.சு.கூ தனித்து நிர்வகிக்கும் பலம்

அரசாங்கத்தையல்ல படையினரையே மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர் - ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச 

மாகாண சபைகனின் தேர்தல் முடிவுகள், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே. வி. பி.) பாரிய பின்னடைவைப் புலப்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த மாகாண சபை நிர்வாகத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த ஜே. வி. பி. இம்முறை எதிர்பாராத தோல்வியை தழுவியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்திருந்தபோது இருந்த செல்வாக்கை ஜே. வி. பி. இந்தத் தேர்தலில் இழந்துள்ளது.இரண்டு மாகாண சபைகளிலும் ஜே. வி. பி. ஏற்கனவே கொண்டிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்தத் தேர்தலில், வெகுவாகக் குறைவடைந்துள்ளது. ஆக, வடமத்திய மாகாணத்தில் ஒரேயொரு உறுப்பினரையும், சப்ரகமுவ மாகாணத்தில் இரண்டு உறுப்பினர்களையும் மாத்திரமே இந்தத் தேர்தலில் ஜே. வி. பி. பெற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட போது இரத்தினபுரி மாவட்டத்தில் ஐந்து ஜே. வி. பி. உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.இம்முறை இருவரை பெற்றுக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல் குறைவான வாக்குகளையே பெற்றுக் கொண்டுள்ளது.
ஜே. வி. பியினரோடு இணைந்து போட்டியிட்ட போது கடந்த முறை சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 15 ஆசனங்களைப் பெற்றிருந்தது. (மேலும்) 26. 08.08

__________________________________________________________________________________.

புலிகளை தப்பவைக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள்

கிளிநொச்சி,முல்லைத்தீவுப்பிரதேசங்களில் தீவிரதாக்குதல்களை மேற்கொண்டவண்ணம் அரசபடையினர் துரிதமாக முன்னேறிவரும் நிலையிலும் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த அந்த பிரதேசங்களில் தொடர்ந்தும் அரச படையினர் வெற்றிகரமாக கைப்பற்றிக்கொண்டு வரும் நிலையிலும் அரச படையினரின் வெற்றிகளை பொறுக்கமுடியாத ஒரு சில சர்வதேச அமைப்புக்கள் ஸ்ரீலங்கா அரசு உடனே புலிகள் இயக்கத்துடன் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டுமெனவும் கூறிவருவதுடன், ஒரு சில சர்வதேச அமைப்புக்குழுவினர் அரசாங்கம் புலிகள் அமைப்புடன் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்த சம்மதித்திருப்பதாகவும் அவ்வாறு சமாதானப்பேச்சுகளுக்கு அரசு தயாராக இருப்பதாகவும் போலிப்பிரசாரங்களை சர்வதேச ரீதியில் செய்துவருகின்றனர். இந்த போலியான தகவல்களை ஸ்ரீலங்கா அரசு முற்றுமுழுதாக மறுத்துவிட்டது. இவ்வாறு புலிகள் இயக்கத்துடன் மேற்கொண்டிருக்கும் யுத்தத்தை அரசு நிறுத்தவோ அல்லது புலிகள் அமைப்புடன் சமாதானப்பேச்சுகளை நடத்தவோ அரசு தயாரில்லை என்பதை ஸ்ரீலங்கா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேற்படி ஒரு சில சர்வதேச குழுவினரின் போலிப் பிரசாரங்கள் பற்றி ஆட்சேபம் தெரிவித்துள்ள சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், புலிகள் இயக்க பயங்கரவாதிகளின் வாயிற்படி வரை வெற்றிகரமாக முன்னேறி வந்துவிட்ட இராணுவத்தினர் எந்தவொரு உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களுக்கோ கோரிக்கைகளுக்கோ போலிப் பிரசாரங்களுக்கோ கட்டுப்பட்டு திரும்பிப் போவதில்லை என்றும் அவ்வாறு பின்வாங்கிச் செல்வதற்கான எந்தவொரு சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கபோவதில்லை எனவும் கூறியுள்ளார். (மேலும்) 26. 08.08

__________________________________________________________________________________.

13வது திருத்தச்சட்டத்துக்கு மேலதிகமான தீர்வினை உள்ளடக்கிய இறுதி அறிக்கை விரைவில் -சர்வகட்சிக் குழு

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து ஜாதிக ஹெல உறுமய விலகியுள்ள நிலையில், 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமான தீர்வுகளை உள்ளடக்கிய அறிக்கையினை சர்வகட்சிக் குழு ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரியவருகிறது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பணிகள் 90 வீதம் பூர்த்தியாகியுள்ள நிலையில், எஞ்சியுள்ள 10 வீதமான விடயங்கள் குறித்து நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதியாக, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம்வகித்த உதய கம்மன்பில, ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட 90 வீதமான விடயங்களையும் அங்கீகரித்துள்ளதாகவும், சர்வகட்சிக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை, பூரணப்படுத்தப்பட்டுள்ள 90 வீதமான விடயங்களையும் ஜாதிக ஹெல உறுமய ஏற்றுக்கொண்டிருப்பதை குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரணவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஜாதிக ஹெல உறுமய விலகியுள்ள போதிலும், குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், எவ்வளவு காலத்தினுள் இறுதி அறிக்கை பூர்த்தியாக்கப்படும் என்பதை தெரிவிக்கவில்லை. இந்தியாவை மாதிரியாகக் கொண்டு, 13 வது திருத்தச்சட்டத்துக்கு மேலதிகமான விடயங்களை உள்ளடக்கிய வகையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் சர்வகட்சிக் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலும்) 26. 08.08

__________________________________________________________________________________.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியபோது கண்டிக்காதவர்கள், தற்போது வன்னி இடம்பெயர்வை கண்டிக்க அருகதையற்றவர்கள்

- இரா.துரைரட்ணம்

Ratnamயாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்மக்கள் வெளியேற்றப்பட்டபோது அதனைக் கண்டிக்காதவர்கள் தற்போது வன்னியிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுகின்ற நிலை ஏற்பட்டிருப்பதைக் கண்டிப்பதற்கு அருகதையற்றவர்கள் என்று ஈபிஆர்எல்எவ்(பத்மநாபா) கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரட்னம் அவர்கள் தெரிவித்துள்ளளர்.கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்அலை வானொலியில் சனிக்கிழமை நடைபெற்ற உறவுப்பாலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர் ஒருவரின் கேளிவிக்கு பதிலளிக்கையிலேயே அவர் அதனைத் தெரிவித்தார்.சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏரானமான நேயர்கள் அவரிடம் நாட்டின் தற்போதைய நிலை குறித்தும் குறிப்பாக கிழக்கு மாகாணசபை குறித்தும் அவரிடம் கேள்விகளைக் கேட்டனர். வன்னியில் பாரிய அவலங்களுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு கிழக்கு மாகாணசபை உதவவேண்டும் என்ற கோரிக்கையை மாகாணசபையில் முன்வைத்த அவரிடம், வன்னி மக்களுக்கு எப்படி உதவப்போகின்றீர்கள் என்று கேட்கப்பட்டபோது அவர் பதிலளிக்கையில் கூறிதாவது: வன்னியில் புலிகளின் பிடியிலிருந்து அவர்களை விடுவிப்பதன் மூலமே அவர்களின் துயரங்களை போக்க முடியும். அதன்பின்னரே அரச நிறுவனங்கள் மூலமும், அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமும் உதவ முடியும். வன்னியில் மக்களின் துயரங்களை காரணம் காட்டி புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நிதிசேகரிப்பில் பலரும் ஈடுபட்டிருப்பதாக அறிகின்றேன். நான் அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்செய்தபோது நீங்கள் படுகின்ற துயரங்களை நேரில் அறிந்துகொண்டேன். (மேலும்) 25. 08.08

__________________________________________________________________________________.

Speech delivered by Mr. V.Anandasangaree, President of the TULF at the opening of the Exhibition “Call of the Conscience” held at the Roy Thomson Hall – Toronto on August 23, 2008

A.sanagary Birthday1Sri Lanka had been a peaceful country for generations, in which the Sinhalese, Tamils, Muslims, Burghers, Malays and people of other ethnic groups, lived in peace and harmony. During the late seventies and eighties there had been a few upheavals, due to the violation of human rights, injustice, discrimination, exploitation and intolerance. The victims were mainly Tamils and Muslims. Various Tamil groups cropped up as saviors, of the Tamils and the Muslims. Their fire-power could not stand against one group called the LTTE which gradually either eradicated the other groups or silenced them with their fire-power and emerged as a single group committed to dictatorship. (Read) 25.08.08

__________________________________________________________________________________.

ஆகஸ்ட் 27 ஹெகலின் 239வது பிறந்தநாள்.

மயிலைபாலு

hegalகார்ல்மார்க்சுக்கு தத்துவ ஞானத்தின் மூலவித்தாக விளங்கிய ஹெகல்1770ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் நாள் ஜெர்மனியில் உள்ள ஸ்டுகர்ட் நகரில் பிறந்தவர் . இவரது முழுப்பெயர் ஜார்ஜ் வில் ஹெம் பிரடெரிக் ஹெகல். இவரது தந்தை ஜார்ஜ்லுத்விக். அரசு ஊழியராக இருந்தவர். இவரது தாய் மரியா மக்டெலனா லூசியா. வசதியானகுடும்பத்தில் பிறந்த இவர் அந்தக் கால கட்டத்திலேயே (1741-1783) மெத்தப் படித்தவர்.இவரே ஹெகலுக்கு இளம் வயதில் இலத்தீன் மொழியில் இருந்த பல விஷயங்களை போதித்தார்.லுத்விக் -மரியா தம்பதியருக்கு மூத்தபிள்ளையாகப் பிறந்தவர் ஹெகல். 3வது வயதிலேயேஜெர்மன் பள்ளியில் சேர்க்கப்பட்ட இவர் ஐந்தாவது வயதில் இலத்தீன் பள்ளியில்பயின்றார். இளம் வயதிலேயே ஷேக்ஸ்பியர் நாடகங்களின் ஜெர்மன் மொழியாக்க நூல்களைத் தனது ஆசிரியர் லாஃபலர் மூலம் கற்றுத் தேர்ந்தார். பிளாட்டோ, சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், போன்ற கிரேக்க தத்துவஞானிகள் இவரைக் கவர்ந்தனர். ஜெர்மன், இலத்தீன் மொழிகளோடு ஹீப்ரு மொழியையும், பிரெஞ்ச் மொழியையும் இவர் பள்ளிப்படிப்புக்கிடையே பயின்றார் என்பதிலிருந்து இவரது அறிவுத்தேடலின் தாகத்தை உணரமுடியும். ஜெர்மன் இலக்கியவாதிகளான கோதே, ஷில்லெர், லெஸ்ஸிங், கிளாப்ஸ்டாக், ஹிப்பெல் ஆகியோரின் இலக்கியங்களை வாசிப்பதிலும் ஆர்வம்காட்டினார். ஹெகலுக்குப் பதின்மூன்று வயதான போது அவரின் அன்புக்குரியதாயார் மரியா காய்ச்சல் நோயால் இறந்தார். அவர் அனுபவித்த முதல் துயரமாக இதுஇருந்தது. ஹெகலுக்குப் பதினெட்டுவயதான போது கிருத்துவ மதபோதனை வழங்கும் இளங் குருமடத்திற்கு அனுப்பப்பட்டார். அப்போதே அவரது மதம் பற்றிய கருத்தில் மாற்றம்ஏற்பட்டது. (மேலும்) 25. 08.08

__________________________________________________________________________________.

பாட்டி படையணி படைகளை விரட்டியடிக்குமா?  

சண்முகம் ரொரன்ரோ

 tamil old womentamil womenபுலிகளின் 25வருட போராட்டத்தினால் வெற்றிகொள்ளமுடியாத இராணுவத்தை படத்தில் காணப்படும் ஏ.கே.47 துப்பாக்கியை தூக்கிய ஆச்சியாலும் கட்டாய பயிற்சிபெறும் தாய்க்குலத்தாலும் தடுத்து நிறுத்தி விட முடியுமா? இந்தப்படங்களை புலிகளின் இணையத்தளங்களில் வெளிநாட்டுத் தமிழர்களுக்கு காண்பித்து வன்னி மக்கள் எல்லாம் மக்கள்படையாக மாறிவிட்டார்கள் வெளிநாட்டுத்தமிழர்களே! எங்களுக்கு உடனடியாக அவசர நிதிதேவை என்று இந்த வயதுபோன அம்மாக்களை வைத்து விளம்பரப்படுத்தி பணம் கேட்கிறார்கள்.  உடுத்த உடையுடன் கட்டாய பயிற்சி பெறும் இவர்களை வைத்து படம் பிடித்து உலகத்திற்கு காட்டும் புலிகள் இந்த அப்பாவி மக்களின் உயிருக்கு உலை வைப்பதற்கும் இந்தப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் புரிந்துணர்வு ஓப்பந்தகாலத்தில் கட்டாய பயிற்சிக்கு என யாழ்ப்பாணத்தில் இருந்த ஆட்டோ வண்டி சாரதிகள் முதல் சாதாரண மக்கள்வரை வன்னிக்கு அழைத்து கட்டாய பயிற்சி கொடுத்து படமும் எடுத்து பத்திரிகைகளில் பிரசுரித்து அவர்களை இனம்காட்டி படைகளுக்கு எதிராக கிளைமோர் வைப்பதற்கு இவர்களை பயன்படுத்தினார்கள். சமாதான காலத்தில் படைகளை தாக்கியபோது அரசாங்கம் கண்டனத்தை புலிகளுக்கு தெரிவித்தபோது புலிகள் கூறினார்கள் நாங்கள் படைகளைத் தாக்கவில்லை மக்கள்படைதான் தாக்குகிறது என்று மறுப்புத்தெரிவித்தார்கள் கடைசியாக இராணுவமும் பதில்தாக்குதல்களை மேற்கொள்ள புலிகள் வன்னிக்கு தப்பி ஒட இராணுவ புலனாய்வுப்பிரிவினரால் மக்கள்படையினர் இனம்காணப்பட்டு கொல்லப்பட்டனர். (மேலும்) 25. 08.08

__________________________________________________________________________________.

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 45 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

வாக்களிப்பதற்குத் தடைகள், அச்சுறுத்தல் இடம்பெற்றதாக பவ்ரல் குற்றச்சாட்டு

 நேற்றைய தினம் இடம்பெற்ற சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபை தேர்தல்களின் இறுதி முடிவுகளின் அடிப்படையில் இரு மாகாண சபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 45 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. வட மத்திய மாகாண சபையில் 307,457 வாக்குகளை பெற்று 20 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுள்ளது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி 205,284 வாக்குகளை பெற்று 12 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 26,738 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் வடமத்திய மாகாணத்தில் பெற்றுள்ளன.மேலும் சப்ரகமுவ மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 472,789 வாக்குகளை பெற்று 25 ஆசனங்களையும் , ஐக்கிய தேசிய கட்சி 346,321வாக்குகளை பெற்று 17 ஆசனங்களையும் மக்கள விடுதலை முன்னணி 19,068 வாக்குகளை பெற்று இரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபை தேர்தலில் பொலநறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு 107910 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.ஐக்கிய தேசிய கட்சி 63265 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முண்ணனி 7381. வாக்குகளையும் பெற்றுள்ளது. வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபை தேர்தலில் அனுராதப்புர மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 199, 547 வாக்குகளை பெற்று 12 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 142,019 வாக்குகளை பெற்று 8 ஆசனங்களையும் , மக்கள் விடுதலை முண்ணனி 19,357 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது (மேலும்) 24. 08.08

__________________________________________________________________________________.

வன்னிக்கள முனைகளில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 26 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் பலி

கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன 

 LTTE 33முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் - கிளிநொச்சி மாவட்டம் வேடங்குளம் - வெலிஓயா மற்றும் ஜனகபுர - ரணபாபுர ஆகிய வன்னிப் போர்முனைகளில் நேற்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின்போது விடுதலைப் புலிகளுடன் எற்பட்ட வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 26 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.இந்தச் சண்டைகளில் மேலும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியுள்ளது. இதுபற்றி இராணுவம் வெளியிட்டுள்ள தகவல்களில் - துணுக்காய் பகுதிகளில் இடம்பெற்ற சண்டைகளில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.3 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி வேடங்குளம் பகுதியில் இடம்பெற்ற சண்டைகளில் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். வவுனியா பாலமோட்டை பகுதியில் தொடரும் மோதல்களில் மேலும் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். 2 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். வெலிஓயா பகுதியில் இடம்பெற்ற சண்டைகளில் 11 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இங்கு இடம்பெற்ற மோதல்களில் 2 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். வெலிஓயா - ஜனகபுர - ரணபாபுர பகுதிகளில் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்ப்டடுள்ளனர். (மேலும்) 24. 08.08

__________________________________________________________________________________.

படையினர் கிளிநொச்சியை நெருங்கிவிட்டதால் எதிர்கால இலக்குகள் சவாலாகவே இருக்கும் - இராணுவத் தளபதி தெரிவிப்பு

பருவப் பெயர்ச்சி மழையால் வடக்கை நோக்கிய இராணுவ முன்நகர்வு தடைப்படும் சாத்தியம்- அரசியல் ஆய்வாளர்

iluppaikkadavaiவடக்கைக் கைப்பற்றும் நோக்கில் இலங்கை அரசாங்கப் படைகள் முன்னெடுத்திருக்கும் இராணுவ முன்நகர்வுகள் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆரம்பமாகும் பருவப்பெயர்ச்சி மழையால் தடைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர், முன்னாள் கேணல் சுசந்த செனவிரட்ன ஏ.பி.செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். தற்பொழுது முன்னெடுத்திருக்கும் இராணுவ முன்நகர்வானது கிழக்கைப் போன்று இலகுவானதாக அமைந்திருக்காதெனவும், கூடுதலான நிலக்கண்ணிவெடிகள் புதைத்து வைத்திருக்கக் கூடும் என்பதால் சிக்கல் நிறைந்த முன்நகர்வாக அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.அண்மைய மோதல்களில் விடுதலைப் புலிகள் உடனடியாக பின்வாங்கிச் செல்கின்றமை, இராணுவத்தினரைக் கவரும் நிகழ்ச்சியாக அமைந்திருக்கலாம் என ஏ.பி.செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கும் செனவிரட்ன, காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் விடுதலைப் புலிகள் இன்னமும் தம்வசம் ஆட்லறி மற்றும் கனரக ஆயுதங்களை வைத்திருப்பதால், கடுமையான பதில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.“இந்த மௌனம் படையினருக்கு நல்லதாக அமையாது” என செனவிரட்ன கூறியுள்ளார். அண்மைய இராணுவ முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளைப் பலவீனமடையச் செய்துள்ளபோதும், இனப்பிரச்சினை மோதல்கள் மூலம் தீர்க்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.“உடனடியாகவோ அல்லது ஆறுதலாகவோ பேச்சுவார்த்தை மூலமான தீர்வொன்றுக்கு நாங்கள் செல்லவேண்டியே இருக்கும்” என அரசியல் ஆய்வாளர், முன்னாள் கேணல் சுசந்த செனவிரட்ன ஏ.பி.செய்திச் சேவைக்கு மேலும் கூறியுள்ளார்.இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் வடமேல் பகுதியில் எட்டு மைல் விவசாய நிலங்களை அண்மித்திருப்பதால் அவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இராணுவ முன்நகர்வுகளை மெதுவாக்கியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்திருப்பதாக ஏ.பி.செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்) 24. 08.08

__________________________________________________________________________________.

ரோம் எரிகிறது? பிடில் வாசிக்கிறார்கள் புலிகள்?

- வணங்காமுடி குண்டாயுதபாணி

  kilinochi-1கடந்த ஒரு வருடமாக இராஹவத்தின் முன் நகர்;வு முயற்சி முறியடிப்பு? இராணுத்தினர்; காயமடைந்தவர்களையும் தூக்கிக் கொண்டுபழைய நிலைகளுக்குத் தப்பியோடினர்?. இராணுவத்தினரின் உடல்களும் ரவைக்கூடுகளும் புலிகளால் கைப்பற்றப்பட்டன? என்று கொமிக்கல் இளந்திரையனின் தினசரி ஜொக்குகளையும் மீறி இப்போது இராணுவம் வெள்ளான்குளத்தையும் கைப்பற்றி. கிளிநொச்சி மாவட்டத்திற்குள் நுழைந்து விட்டது, வழமை போல.  அரசியல் ஆய்வாளர்கள் உள்ளுக்குள்ளை வரவிட்டு அடிக்கப் போறாங்கள்? புலி பதுங்குது. பாயப் போகுது? என்று புலன் பெயர்ந்த தமிழ்கூறு நல்லுலகத்தை உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார்கள், ஏன் இராணுவம் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கான விடையை அறிய நீங்கள் நீணட தூரம் போகத் தேவையில்லை, புலிகளின் புதினம்,கொம் செய்தியைத் தினசரி வாசித்தால் நிலைமை புரியும்,  களமுனையில் நின்று எதிரியை எதிர்கொள்ள வேண்டிய புலிகளின் தளபதிகள் எல்லாம். குறுந்தட்டு. ஒளிவட்டு வெளியீடு. புத்தக. சஞ்சிகை வெளியீடு. 12 வருடங்களுக்கு முன்னர்; நடந்த ஓயாத அலைகளின் வெற்றியின் நினைவு விழா போன்றவற்றில் கலந்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள், களமுனைத் தளபதிகள் மேடையில் நின்று. பட்டுக்காட்டுப் போநாயா பாணியில் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள், மைக்கைத் தூக்கி விலா அடிக்கும் இவர்கள். துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு எதிரியை நேர்கொண்டிருந்தால். இராணுவம் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்க முடியாது,  ஒருபுறத்தில். வன்னி மக்களுக்கு நிலைமை எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் என்ற பிரமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழாக்கள் ஏற்பாடு செய்யப்படக் கூடும்,  ஆனாலும். இந்த தளபதிகள் எல்லாம் களமுனைக்குப் போகாமல். கிளிநொச்சி மேடைகளை அலங்கரிப்பதற்குக் காரணமும் இருக்கிறது, (மேலும்) 24. 08.08

__________________________________________________________________________________.

வன்முறைக்கு பயந்து ஓடி ஒளியும் இனமாக எம்மை எவரும் பார்க்க வேண்டாம்

- ரவூப் ஹக்கீம்

hakeemafp203வன்முறைக்கு பயந்து ஓடி ஒளியும் இனமாக எவரும் எம்மைப் பார்க்கக் கூடாது. நாம் எதற்கும் தயாராகவேயுள்ளோம். இந்தத் தேர்தலில் அரசுக்கும் அதன் குண்டர் குழுவுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சப்ரகமுவ வடமத்திய மாகாண சபை தேர்தல் வன்முறைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சப்ரகமுவ வடமத்திய மாகாண சபை தேர்தல் களத்தில் அரசினாலும் அதன் குண்டர்படைகளாலும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கெக்கிராவை பகுதியிலுள்ள எமது முக்கியஸ்தர் ராவுத்தர் நைனா முகம்மட் மற்றும் அன்வர்தீன் என்ற வேட்பாளர் ஆகியோரின் வீடுகள் குண்டர் படைகளால் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களுடன் ஊர்வலமாக வரும் குண்டர் குழுவே இந்த வன்முறைகளில் ஈடுபடுகின்றது. எமது பொலிஸ் மா அதிபர் கேலிக்குரியவராக காணப்படுகின்றார். அதனால் இச்சம்பவங்களையெல்லாம் பொலிஸாரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகின்றது. (மேலும்) 24. 08.08

__________________________________________________________________________________.

வடக்கில் விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மீட்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் 90 தினங்களில் பூரண சிவில் நிர்வாகம் - அமைச்சர் டியூ குணசேகர

விரைவில் வடக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துவருவதாக வடக்கிற்கான விசேட செயலணிக் குழுவின் தலைவர் அமைச்சர், டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு தசாப்தங்களாக யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படாத நிலையில், வடமாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட முன்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.யாழ் மாவட்ட மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டால் அது பயனுள்ள ஒன்றாக அமையுமெனவும், தமது பிரதிநிதிகளை அங்குள்ள மக்கள் தேர்ந்தெடுத்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச்செல்ல முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.அதேநேரம், வடக்கில் தேர்தல்களை நடத்தக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது என இராணுவத்தினர் அறிவித்ததும், அங்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.வடக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் வடமாகாணத்துக்கான தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார். (மேலும்) 24. 08.08

__________________________________________________________________________________.

முதலமைச்சர் தலைமையில் துரித விவசாய அபிவிருத்திக்கான மீளாய்வுக் கூட்டம் 

கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை துரித அபிவிருத்தி செய்கின்ற முதலமைச்சரின் கொள்கைத் திட்டத்திற்கு இணங்க மாகாணத்தின் சகல பிரதேசப் பிரிவுகளிலும் மேற்படி கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில் கடந்தவாரம் வவுனதீவு, பட்டிப்பளை ஆகிய பிரதேச பிரிவுகளில் மேற்படி கூட்டங்கள் இடம்பெற்றன. இன்று (23.08.2008) காலை 9.45மணியளவில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இக்கூட்டத்தொடர் ஆரம்பமானது. பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இக்கூட்டத்தின் நிகழ்வு பற்றிய தொடக்கஉரையை நிகழ்த்தி, இன்று ஆரம்பிக்கப்பட்ட பிரதேச தையல் பயிற்சி நிலையத்திற்காக 20 தையல் இயந்திரங்களையும், 2 போதனாசிரியர்களுக்கான நியமனங்களையும் முதலமைச்சா வழங்கி வைத்தார். மேலும் அப்பிரதேசத்தினது விவசாய வேலைத்திட்டங்கள் பற்றியும், அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக எதிர்நோக்கும் தடைகள் மற்றும் தேவைகள் பற்றியும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் உரையாற்றினார்கள். குறிப்பாக விவசாயம், கமநலசேவை, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, வனவளம், மரமுந்திரிகை, தெங்கு, காப்புறுதி மற்றும் வனவிலங்கு போன்ற திணைக்களங்கள் சம்பந்தமாக ஆராயப்பட்டன. மேற்படி கூட்டத்தில் உடனடி வேலைத்;திட்டங்கள், நீண்டகால வேலைத்திட்டங்கள் என வகுக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்ட அபிவிருத்திப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஆவணை செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பணித்தார். (மேலும்) 24. 08.08

__________________________________________________________________________________.

வந்த வாய்ப்புக்களையெல்லாம் எள்ளி நகையாடி தற்போது தெற்கு ஒசோட்டிய கனவுகளுடன் புலிகளும், புலிகளின் ஆதரவாளர்களும்.

- அகதி தமிழன்

kilinochchi-5சில தினங்களுக்கு முன்னர் புலிகளின் லண்டன் ஆங்கில ஏடான 'தமிழ் கார்டியன்" இல் தெற்கு ஒசோட்டியாவில் ரஷ்யா பிரவேசித்திருப்பது பற்றி ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. நாடுகளின் இறைமை பற்றிய கருத்து ஒன்றும் புனிதமானதல்ல. தத்தமது பிராந்திய நலன்கள் சார்ந்த ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் அல்லது ரஷ்யாவும் செயற்படுகின்றன. எனினும் இதில் சாதகமான அம்சங்களும் இருக்கின்றன. சேர்பியாவிலிருந்து கொசோவா பிரிந்தது தற்போது ஜோர்ஜியாவின் ஒசோட்டிய பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கிற நிலைமையும் ஒரு நாட்டினுள் பலவந்தமாக இணைக்கப்பட்டிருக்கும் தேசங்கள் சுதந்திரமடைவதற்கான நிலைமைகளை உருவாக்கியிருப்பதாக எழுதியிருந்தது. உண்மையில் இலங்கையில் யாரும் நுழைந்து ஈழத்தை உருவாக்கி பிரபாகரனுக்கு முடி சூட்டுவார்களா என இவர்கள் அங்கலாய்க்கிறார்கள் என்பது புரிகிறது. தற்போது புலிகள் சந்தித்திருக்கும் சங்கடமான சூழ்நிலைகளில் இருந்து புலிகளை யாரும் விடுவிப்பார்களா என்று ஆதங்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்கா தான் உடைத்தால் அது மட்குடம் ரஷ்யாவோ அல்லது அவர்களால் கெடுபிடியான நாடுகள் என கருதப்படுவர்களால் உடைக்கப்பட்டால் அது பொற்குடம் என்றவாறு உலக அரங்கில் செயற்படுகிறது, செயற்பட முனைகிறது என்பது உலகளாவிய உண்மையே. அமெரிக்கா ஈராக்கில் நுழைந்தபோது ஆப்கானிஸ்தானில் நுழைந்தபோது. சேர்பியாவில் ஐ.நா வின் பேரில் தாக்குதல்களை நடத்தியபோது எல்லாம் ஊடகங்கள் அமெரிக்காவை ஜனநாயகத்தின் காவலன் என சித்தரித்தன. உலகின் மதிப்புக்குரியதும், பலம் வாய்ந்தவை என கூறப்பட்ட ஊடகங்கள் அவ்வாறுதான் செயற்படடன. (மேலும்) 23. 08.08

__________________________________________________________________________________.

மாணவன் கொலையின் எதிரொலி: கிழக்குப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது; சிங்கள மாணவர்கள் வெளியேற்றம்

east universityவந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தகபீட இறுதியாண்டைச் சேர்ந்த மாணவன் பஸன் சமரசிங்க(22) இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்குப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், விடுதிகளிலிருந்து சிங்கள மாணவர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டதாக கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்றிரவு 8.45 மணியளவில் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள், சிறியரக கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அந்த மாணவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.இந்த நிலையில், கிழக்குப் பல்லைகலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதுடன், விடுதிகளில் தங்கியிருந்த சிங்கள மாணவர்கள் அவர்களின் பாதுகாப்புக்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகத்தின் விரிவுரை நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லையெனவும் கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரியொருவர் எம்மிடம் தெரிவித்தார். எனினும், இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லையென அவர் கூறினார். நேற்றைய சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர் பஸன் சமரசிங்கவின் சடலம் பிரேதப் பிரசோதனைக்காக மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர் குருநாகல், பொத்துஹர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. (மேலும்) 23. 08.08

__________________________________________________________________________________.

துணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

SL Armyஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய் அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதியையும் இராணுவத்தினர் இன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாக விளங்கிய துணுக்காய் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர் கடந்த ஒரு வாரகாலமாக அந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளுடன் கடுமையாகப் போராடியதாகவும் இதற்கு உதவியாக விமானப்படையினரும் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களுககு சேதங்களை ஏற்படுத்தியதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது. துணுக்காய் நகரப்பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுட்ன இன்று வவுனியாவில் உள்ள வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்து முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது. துணுக்காய் நகரத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியுள்ளமையானது வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான வெற்றி நிலையாகும் என்றும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது. (மேலும்) 22. 08.08

__________________________________________________________________________________.

call of the

 

உறவுப்பாலம்
டான் தமிழ்அலை வானொலியில்
பிரதி சனிக்கிழமை தோறும் புதிதாக ஆரம்பமாகவுள்ள உறவுப்பாலம் என்ற நிகழச்சி ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிமுதல் 12 மணிவரை நடைபெறவுள்ளது. 23.08.2008 சனிக்கிழமை இடம்பெறவுள்ள உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா) அணியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான
இரா. துரைரட்ணம் அவர்கள்
கலந்துகொள்கின்றார். வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கிழக்கு மாகாணசபை உதவவேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்த இவரிடம், வன்னி நிலைமைகள் தொடர்பாகவும் நாட்டின் இன்றைய நிலை தெமாடர்பாகவும் நீங்களும் உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்:
0033 1 70 61 57 98

__________________________________________________________________________________.

மாகாண சபைகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி- 1, 772 நிலையங்களில் நாளை வாக்களிப்பு

electionவடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இரு மாகாணங்களிலுமுள்ள நான்கு மாவட்டங்களிலும் 1772 வாக்களிப்பு நிலையங்களில் நாளை சனிக்கிழமை வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இரு மாகாண சபைகளுக்குமான வாக்களிப்பு நாளை சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிவரை நடைபெறும்.வாக்களிப்பிற்கு ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன என்பதுடன் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை நேரக்காலத்துடன் அளிக்குமாறு தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்விரு மாகாண சபைகளுக்கும் 73 உறுப்பினர்களை தெரிவு செய்யப்படவேண்டிய நிலையில் 1698 பேர் தேர்தலில் ப