|
கொத்துறொட்டிக் கடையை விட்டால் நம்மவர்களுக்கு வேறு எதுவுமில்லையோ!
உணவுச்சாலைகள், சில்லறை வர்த்தகங்கள், மதுபானச்சாலைகள், தெருவோர வியாபாரங்கள் இவை யாழ்ப்பாணத்தின் தற்போதைய பொருளாதாரப் பங்களிப்பில் முதன்மை பெற்றுள்ளன. ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று ஒருவர் செய்யும் தொழில் முயற்சியையே எல்லோரும் செய்கின்ற தன்மையை பார்க்கும்போது எங்கள் முயற்சியில் விரிவுத்தன்மை இல்லாதிருப்பதை காணமுடிகின்றது. கண்டி தலதா மாளிகைக்கு அண்மையிலுள்ள வாவியைச் சுற்றிப் பார்ப்பதற்கென இயந்திரப் படகுகள், அதற்கென ஒரு தொகை கட்டணம் என்றவாறு வித்தியாசமான முயற்சி நடக்கின்றன. ஹபரண, தம்புள்ள ஆகிய இடங்களில் உள்ள உல்லாசப்பயணிகள் விடுதிகளைச் சுற்றி யானைச்சவாரி நடைபெறுகின்றது. யானையில் சவாரி செய்வதற்கு வெளிநாட்டவர் ஒருவரிடம் இரண்டாயிரம் ரூபாயும், உள்நாட்டவர் ஒருவரிடம் எழுநூற்றைம்பது ரூபாயும் அறவிடப்படுகின்றன. இதற்கு மேலாக சிறுகைத்தொழில் முயற்சிகளில் கிடைத்த உற்பத்திப் பொருட்கள், மரத்தால் செய்யப்பட்ட சிற்பங்கள் என்பவற்றின் விற்பனை ஒருபுறம் களைகட்ட, மறுபுறத்தில் பொலநறுவை - பராக்கிரமபாகு மன்னன் - இலங்கை வரலாறு என்பவற்றை சித்திரிக்கும் புகைப்படங்களின் விற்பனைகளும் தாராளம். (மேலும்) 03.09.10
________________________________________________________________________________________________
வடக்கில் புலிகள் செய்த கொலைகள் தமிழினி வெளிப்படுத்தியுள்ளாராம் - குற்றப் புலனாய்வு நீதிமன்றில் தெரிவிப்பு
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் மகளிர் அணித் தலைவி தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி புலிகள் கடந்த காலங்களில் வடக்கில் மேற்கொண்ட கொலைகள் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் ரஷ்மி சிங்கப்புலிக்கு அறிவித்துள்ளனர். சந்தேக நபர் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தமிழினி பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப் பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சட்டமா அதிபரிடம் விரைவில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்ட நீதவான் சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவிட்டுள்ளார். (மேலும்) 03.09.10
________________________________________________________________________________________________
இந்த அரசியலமைப்புத் திருத்தமானது எனது பதவிக் காலத்தை நீடிக்கும் ஒன்றல்ல. அது தவறு.
- ஜனாதிபதி ராஜபக்ஷ
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் கூறப்படுவது போல் ஆபத்தான விடயங்கள் எதுவும் கிடையாதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தக் கருத்துகளை வெளியிட்டார். அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது;எமது கட்சி வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சூழ்ச்சியின் மூலம் ஆட்சியை அமைக்கவோ அல்லது ஆட்சியை கவிழ்க்கவோ இல்லை. நாம் சூழ்ச்சிகளில் ஈடுபடாவிட்டாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக எப்போதும் சூழ்ச்சிகள் இருந்தே வந்துள்ளன. 1962 ஆம் ஆண்டு இராணுவ சூழ்ச்சி, 1964 ஆம் ஆண்டு பத்திரிகை சட்டமூலம் போன்ற சூழ்ச்சிகளுக்கு சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. இன்றும் அந்த சூழ்ச்சி தொடர்ச்சியாக எமது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (மேலும்) 03.09.10
________________________________________________________________________________________________
முள்ளிகுளம் பிரதேசத்தில் கடற்படையினரின் வடமேல் பிராந்திய தலைமைக் காரியாலயம்
கடற்படையினரின் வடமேல் பிராந்திய தலைமைக் காரியாலயம் இன்று மன்னார் மாவட்டத்தின் முள்ளிகுளம் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இத்தலைமைக் காரியாலயம் இது வரை காலமும் புத்தளத்தில் இருந்து வந்த நிலையில் இப்புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸாரா சமரசிங்கவின் அழைப்பின்பேரில் பாதுகாப்புச் செயலாளர் இங்கு வந்து புதிய தலைமைக் காரியாலயத்தைப் பார்வையிட்டு திறந்து வைத்தார். இந்த இட மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முப்படைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், சர்வமத குருமார் உட்பட அரச உயர் மட்டத்தினர் பலரும் வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.
________________________________________________________________________________________________
குவிந்துவரும் அமெரிக்க-சீனப் பகைமையின் ஆபத்து
பீற்றர் சிமொண்ட்ஸ்
2007-08ல் வெடித்த பூகோள பொருளாதார நெருக்கடி, இரு சக்திகளுக்கும் இடையில் பகைமையை பெருமளவு உக்கிரமாக்கியுள்ளது. ஆரம்பத்தில், நிதி உருகு நிலையையின் ஆபத்தை எதிர்கொண்ட ஒபாமா நிர்வாகம், பெய்ஜிங்கிடம் உதவிகளைப் பெற முயற்சித்தது. உலகின் மிகப்பெரும் கடன்கார நாடான அமெரிக்கா, சீனாவில் இருந்து உள்ளே பெருக்கெடுக்கும் நிதியிலேயே கனமாகத் தங்கியிருந்தது. ஆனால், நிதி கொந்தளிப்பு தற்காலிகமாக தணிந்த நிலையில், சீன நாணயத்தை மீள் மதிப்புச் செய்வது, வர்த்தக மற்றும் காலநிலை மாற்ற நடவடிக்கைகள் உட்பட ஒரு தொகை விவகாரங்களில் பெய்ஜிங்கை வாஷிங்டன் நெருக்கத் தொடங்கியது. அதே சமயம், அது ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்குள் செயலூக்கத்துடன் தலையிடத் தெடங்கிவிட்டது. கடந்த ஜூலையில், தாய்லாந்தில் நடந்த ஏசியன் மாநாட்டில், அமெரிக்கா "ஆசியாவிற்கு மீண்டும் வந்துள்ளது" என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிளின்டன் தெளிவாகக் கூறிப்பிட்டார். இது ஆசியவை அலட்சியம் செய்துவிட்டதாக முன்னைய புஷ் நிர்வாகத்தின் மீதான விமர்சனத்தை சுட்டிக்காட்டுவதாகும். புதிய இராஜதந்திர முயற்சிகள் பற்றி சமிக்ஞை செய்த கிளின்டன், "சீனாவின் அயலவர்களில் ஒரு தொகையினர் [அதன் எழுச்சி பற்றி] கவலை வெளியிட்டுள்ளனர், எனவே, கிழக்கு மற்றும் தென் கிழக்காசியாவில் உள்ள ஒரு தொகை நாடுகளுடன் எமது உறவுகளை நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்," என நிருபர்களிடம் கூறினார். (மேலும்) 03.09.10
________________________________________________________________________________________________
இந்திய முதலீட்டாளர்களின் ஆர்வம் இலங்கையில் அதிகரித்து வருகிறது – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையில் இந்திய முதலீட்டு ஆர்வம் துரிதமாக அதிகரித்து வருகிறது இந்தியாவின் பல முன்னணி தொழில்முயற்சியாளர்களும் கைத்தொழில் அதிபர்களும் வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் இலங்கையில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காண்பித்துள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தற்போது விஜயம் செய்துள்ள அந்நாட்டு வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அலரிமாளிகையில் நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறி;னார். இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம் பெற்றது. இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கைகள், வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியன குறித்து ராவ் திருப்தி தெரிவித்தார். வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற பல இடங்களுக்;கும் கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்த ராவ் அவ்விடங்களில் நிலைமை திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்புத் திட்டம், வடக்கில் ரயில் பாதை புனரமைப்பு ஆகியன உட்பட இந்தியா உதவியளிப்பதாக உறுதியிக்கப்பட்ட திட்டங்களை இந்தியா விரைவில் செய்துகொடுக்கும் என ராவ் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். (மேலும்) 03.09.10
________________________________________________________________________________________________
இன்ரர்போல் அதிகாரிகளாக பெண் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 6 பேர் கைது 6 பேரும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள்
இன்ரர்போல் அதிகாரிகளென்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த பெண் ஒருவரை திடீரெனப் பயமுறுத்தி மிரட்டிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் அதிகாரி ஒருவர் உட்பட இராணுவத்திலிருந்து தப்பியோடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் பொரளை, கடுவல, தெமட்டகொட, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்தவர்களென்பது விசாரணைகள் மூலம் வெளிவந்திருக்கிறது. கொஸ்வத்த பொலிஸ் பிரிவிலுள்ள பொத்துரட்ட வனப் பகுதிக்கு 6பேர் வாகனத்தில் வந்துள்ளனர். சர்வதேச பொலிஸான இன்ரர் போலின் அதிகாரிகள் என்று தம்மைக் காட்டிக்கொண்ட இவர்கள் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட விரும்புவதாக கூறியுள்ளனர். அந்த வீட்டு உரிமையாளர் டுபாயில் பணியாற்றும் பெண்ணாகும். சில நாட்களுக்கு முன்பே அவர் வீட்டுக்கு திரும்பிவந்திருந்தார். தங்க நகையை அப்பெண் திருடிக்கொண்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டு கிடைத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளதுடன், அதனை எடுத்துச் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.வெளிநாட்டுக்காரர் போன்று தோற்றமளித்த ஒருவரும் அக்குழுவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் 1,020,000 ரூபா பெறுமதியான நகைகளுடன் அவர்கள் அங்கிருந்து சென்றதுடன் கொழும்பில் அப்பெண்ணை சந்திப்பதாக கூறியுள்ளனர்.அதன் பிரகாரம் அப்பெண் கொழும்புக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதுடன் கணிசமான அளவு தொகை கொடுக்காவிடின் விடயம் தொடர்ந்தும் இருக்கும் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளது.அதனால் தனது வங்கிக்கணக்கிலிருந்து 475,000 ரூபாவை அப்பெண் எடுத்திருக்கிறார்.பின்னர் அப்பெண் வழக்கறிஞர் ஒருவரின் ஆலோசனையை நாடியுள்ளார். அதன் பிரகாரம் சிலாபம் பொலிஸ் அத்தியட்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிலாபம் பிரிவிலுள்ள தீர்க்கப்படாத குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவுக்கு இந்த விடயத்தை அவர் ஒப்படைத்திருப்பதாக டெய்லிமிரர் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
________________________________________________________________________________________________
மிடுக்குடன் மீண்டெழுகிறது யாழ். உள்ளூர் பொருளாதாரம்
யாழ். குடா நாட்டிலுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் தற்போது கூடுதலான வருமானம் பெற்று வருகின்றனர். அங்குள்ள விவசாய மற்றும் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களுக்கு இன்றைய காலத்தில் சிறந்த சந்தை வாய்ப்புக் கிடைத்து வருவதனாலேயே உற்பத்தியாளர்களுக்கு இத்தகைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. யுத்தம் நிலவிய காலப் பகுதியில் யாழ். குடா நாட்டுக்கும் தென் பகுதிக்கும் இடையிலான தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. யாழ். குடாவின் உற்பத்திப் பொருட்களை தென் பகுதிக்கு அனுப்பி வைக்க முடியாதிருந்தது. அப்பொருட்களை உள்ளூரிலேயே விற்பனை செய்ய முடிந்ததால் சிறந்த விலை கிடைக்க வில்லை. இதன் காரணமாக அங்குள்ள விவசாயிகள் மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்கள் போதிய வருமானத்தைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர். யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து யாழ். குடா நாட்டிலுள்ள உற்பத்தியாளர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அங்கு உற்பத்தியாகின்ற அத்தனை பொருட்களையும் அவர்கள் தென்பகுதிக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கக் கூடிய சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. (மேலும்) 03.09.10
________________________________________________________________________________________________
ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் இறக்குமதியின் பங்கு
( ஸ்ரீலங்கா கொள்கைக் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனர் கலாநிதி சமன் கெலேகம ஸ்ரீலங்கா வணிகக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.)
ஸ்ரீலங்காவின் பிராந்தியப் பார்வையில் 5 மையப் பரப்புகளையும் நோக்கினால்: வான்துறை : இன்று 42 வீதத்தை அண்மிய ஸ்ரீலங்கன் விமானசேவையின் வருவாய் இந்திய பறப்புகளினாலேயே கிடைக்கிறது. வாரத்திற்கு 90 – 100 விமான சேவைகள் நடத்தப் படுகின்றன கப்பல்துறை : இன்று கொழும்புத் துறைமுகத்தில் 71 வீதத்தை அண்மிய மாற்றி ஏற்றும் சரக்குகள் இந்தியாவிலிருந்தே வருகிறது. சக்தி : இன்று 35 வீதத்தை அண்மிய எங்களது எண்ணெய் இறக்குமதி இந்தியாவிலிருந்து லங்கா ஐ.ஓ.சி மூலம் வருகிறது. அறிவு : தகவல் தொழில்நுட்பம்,உயிரியல் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், ஆயரவேத மற்றும் சுதேச மருந்து வகைகள் என இவைகள் எல்லாவற்றையும் நாம் இந்தியாவுடன் நெருக்கமாகப் பகிர்ந்து கொள்கிறோம். ஸ்ரீலங்காவை ஒரு பிராந்திய மையமாக்குவதைப் பற்றிப் பேசும்போது முக்கியமாக இவைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை ஒதுக்கிவிட்டு இந்த மையங்களை அபிவிருத்தி செய்வது இயலாத செயல் எனபதையே நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தக் கட்டத்தில் பிரேரிக்கப்பட்டிருக்கும் சட்டக வேலைத் திட்டமான “ விரிவான பொருளாதார பங்காளர் உடன்படிக்கை (CEPA) “ “ போன்றவை முக்கிய கவனத்தில் எடுக்கப் பட வேண்டும். விரிவான பொருளாதார பங்காளர் உடன்படிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. ஐரொப்பிய ஒன்றியத்தினுள் கூட “ஈரோ கோப்புகள்” மற்றும் “ஈரோ சந்தேகங்கள்” என இரண்டுவகை விவாதங்கள் இருக்கின்றன முக்கியமாக ஐக்கிய .இராச்சியத்துக்குள் ,தொடர்ந்தும் ஐரொப்பிய ஒன்றியத்திலிருப்பதா? அல்லது தனியாக இருப்பதா? என்கிற விவாதங்கள் தொடர்கின்றன. (மேலும்) 03.09.10
________________________________________________________________________________________________
முன்னேறத் துடிக்கும் யாழ் பல்கலைக்கழகம்.
எழுதுவது தேசியத்தலைவர்
தமிழ் சமுதாயம் மட்டுமல்ல விடுதலைப்ப்புலிகளால் அழிக்கப்பட்டது. பல தலைவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். தொண்டு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள்; சீர்கெடுக்கப்பட்டன.. இதில் முதன்மையானது யாழ்ப்பாண பல்கலைக்கழகம். 86 களில் இந்த அழிவு தொடங்கியது. பின் விடுதலைப்புலிகள் -அரசு யுதத நிறுத்த காலத்தில இது உச்ச நிலையை அடைந்தது. இன்னும் அது மாறவில்லை என்பதற்கு அங்கிருக்கும் பொங்குதமிழ் பெயர்ப் பலகை உதாரணமாகும். இந்த அழிவை செய்தவர்களில் முதல்வராக இருப்பது அன்றும் இன்றும் பிரபலமானவர் முன்னாள் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுந்தரம் பிள்ளை. இவர் புலிகளின் நலன் விரும்பியும், சேவகருமான துணைவேந்தர் துரைராசாவின் மறைவுக்குப் பின்பு பதவிக்கு வந்தவர். இவரது கைப்பாவையாகவே தற்போதைய துணைவேந்தரும் இயங்குகிறார். முன்னாள் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுந்தரம் பிள்ளை ஐரோப்பாவுக்கு சென்றபோது, அங்குள்ள புலிகள் ஊர் ஊராக, கூட்டம் கூட்டி இவரை அங்கு புலிகளின் எதிர்கால கல்வித் திட்டம், போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழகதின் பங்கு, புலம் பெயர்ந்தோர் புலிகளை ஆதரிக்க வேண்டியதன் நியாயப்பாடு பற்றி சொற்பொழிவார்ற வைத்தார்கள். இது அவர் அங்கு ஆற்றிய உரையின் சிறு நறுக்கு: "..................... தம்பிமார் என்கட தலைவரை சும்மா நினைச்சிராதேயுங்கோ! ..கொஞ்சம் மெத்தப் படிச்சவயள் அவருக்கு இங்கிலீஷ் தெரியாது, எட்டாம் வகுப்புக்கு மேல படிக்கயில்ல, எண்டெல்லாம் மடக்கதை பறைவினம். அவர் எல்லாத்தையும் அறிஞ்சு வைச்சிருக்கிறார். 88இல இருந்து இண்டைக்கு வரைக்கும்; அவரட ஆலோசனையின் பேரில்தான் நாங்கள் இயங்கிறம் என்பது கவேர்மேன்டுக்கே தெரியும். (மேலும்) 03.09.10
________________________________________________________________________________________________
ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியச் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நானே முழுப்பொறுப்பு! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காகத் தென்னிலங்கைக்கு அழைத்துச் செல்லப் படும் பெண்களின் பாதுகாப்புக்கு தாம் பொறுப்பேற்பதாக உறுதிமொழி வழங்கினார் பாரம்பரிய சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அமைச்சரின் அனுசரணையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை தென்னிலங்கை ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்களான "டைமெக்ஸ்' , "பெர்கஸம் காமென்ஸ்' ஆகி யன இளைஞர், யுவதிகளுக்கு கருத்தரங்கு ஒன்றை நடத்தின.இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு உறுதி வழங்கினார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியவை வருமாறு: தென்னிலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காகச் செல்லும் யாழ்ப்பாணப் பெண்களுக்குப் பொறுப்பாக நான் இருப்பேன். அங்கு அவர்களுக்கு ஏதாவது விபரீதங்கள் நடைபெற்றால் உடனடிச் சட்ட நடவடிக்கை எடுப்பேன். எனினும் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறமாட்டாது என்று உறுதியாகக் கூறினார். இக்கருத்தரங்கில் பல இளைஞர், யுவதி கள் கலந்து கொண்டனர்.
________________________________________________________________________________________________
சித்திரா என்ற போராளி இருபிள்ளைகளை தவிக்கவிட்டு உலகத்தை விட்டு மறைந்த கதை உண்மைச் சம்பவம்
மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என வீராப்பு பேசிக்கொண்டு விடுதலைப் போராட்டத்தின் பேரால் சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டிருப்பவர்களின் காதுகளில் மட்டும் இந்த அவலங்களும் அழுகுரல்களும் கேட்பதாக தெரியவில்லை. விடுதலையின் பேரால் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துகள் மேற்குலக நாடுகளில் பலரின் கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சித்திரா வேண்டி நின்றதெல்லாம் 38ஆயிரம் ரூபா மட்டும்தான். மேற்குலக நாடுகளில் மக்களின் பணத்தில் ஏப்பம் விடுபவர்களுக்கு எங்கே சித்திரா போன்றவர்களின் அழுகுரல் கேட்கப்போகிறது. தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் அத்தனையையும் தவிடு பொடியாக்கும் வகையிலேயே இன்று சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் மட்டக்களப்பு பன்குடாவெளியில் நடைபெற்ற ஒரு சம்பவம் இனவிடுதலைக்காகவும் அந்த விடுதலைப் போராட்டத்திற்காகவும் முழுக்குடும்பமுமே தம்மை அர்ப்பணித்திருந்தவர்களுக்கு இந்த சமூகம் கைகொடுக்க தவறிவிட்டதே என்ற வேதனையும் ஆதங்கமுமே மேலோங்கியிருக்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்த ஒரு குடும்பம். கடந்த வாரம் அந்த குடும்பத்தில் எஞ்சியிருந்த போராளித் தாயும் இறந்து போனபோது அவர்களின் இரு பிள்ளைகள் இன்று யாரும் அற்ற அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். (மேலும்) 03.09.10
________________________________________________________________________________________________
ராஜரட்னத்தின் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
வர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையரான, அமெரிக்க தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தின் வழக்கினை விசாரணை செய்வதற்கு அமெரிக்க நியூஜேர்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கெலொன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்த வரிசையில் 559ஆம் இடத்தை வகிப்பவருமான ராஜ் ராஜரட்னம் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி உதவி வழங்குவதாக ராஜரட்னம் ஒப்புக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
________________________________________________________________________________________________
உத்தேச திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஐ.தே.க. வாக்களிக்கும்
செயற்குழுவின் முடிவை அறிவித்தார் ரணில்
உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெறும் போது அதற்கு எதிராக வாக்களிப்பதென பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.தீர்மானித்துள்ளது.ஐ.தே.க.வின் செயற்குழு இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்தார். கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் செயற்குழு கூடி ஆராய்ந்தபின் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ரணில் இதனை அறிவித்தார்.அரசின் உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனைகளைஅமைச்சரவை அங்கீகரித்து உயர்நீதிமன்றின் பரீசிலனைக்கு இப்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலைமையில் ஐ.தே.க.தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.செய்தியாளர் மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது மக்களின் ஆணையைப் பெறாத காரணத்தினால் உத்தேச அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. ஆகவே திருத்த சட்டமூலத்துக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதுடன் எதிர்த்து வாக்களிப்பதற்கும் கட்சியின் செயற்குழுவில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (மேலும்) 02.09.10
________________________________________________________________________________________________
பழைய சைக்கிளில் மாத்தறையிலிருந்து 8 நாள்களில் யாழ்.வந்த 8 நாள்களில் யாழ்.வந்த தெனியாய வாசி 26 ரூபாவுடன்வந்து முக்கிய இடங்களைப் பார்வையிட்டார்.
மாத்தறை தெனியாய பிரதேச தன்பிற்ற கிராமத்தைச் சேர்ந்த மல்லவ ஆரச்சிகே ரத்னபால என்ற கிராம வாசி தனது பழைய சைக்கிளில் அங்கிருந்து பயணித்து எட்டுத் தினங்களில் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். யுத்தம் முடிவுற்றதையடுத்து பெரும் எண்ணிக்கையில் தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுப்பதைக் கேள்விப்பட்ட இவர் தமது சைக்கிளிலேயே யாழ்ப்பாணம் சென்றால் என்ன? என்ற எண்ணத்துடன் யாழ்.வரத் தயாரானார். சைக்கிளில் நெடுந்தூரம் தனியாகப் பயணத்தை மேற் கொள்ள வேண்டாமென அவரது குடும்பத்தினர் அவருக்குத் தடைபோட்டனர். ஆனாலும் அவர் அதைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ள வில்லை. தன்னம்பிக்கையுடன் தமது பயணத்தை ஆரம் பித்தார். ஒரு வார்த்தைகூட தமிழில்பேசத் தெரியாத, யாழ்ப்பாணம் செல்லும் பாதை கூட அறியாத அவர் தமது பயணத்தை ஆரம்பித்தபோது கை வசமிருந்த பணம் ஆக இருபத்தியாறு ரூபா மட்டும்தான். தைரியம், தன்னம்பிக்கையுடன் தெனியாயவில் இருந்து புறப்பட்டு வவுனியாவை அடைந்து அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் வரையில் எந்தவொரு சிரமத்துக்கும் அவர்முகம் கொடுக்கவில்லை. யாழ்ப்பாணம் வந்த பின்னரே அவரது சைக்கிளின் நடுஅச்சு உடைந்து போனது. எனினும் இராணுவ முகாமொன்றின் சிப்பாய்களின் உதவியால் அது புதிதாக மாற்றப்பட்டது. (மேலும்) 02.09.10
________________________________________________________________________________________________
அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்? (பகுதி: ஒன்று )
எஸ்.எம்.எம்.பஷீர்.
“அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக் கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று” (அதிவீரராம பாண்டியர்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கவிழ்க்க வேண்டும் அவரை வீட்டுக்கு அனுப்ப வேன்டும் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டுமல்ல அதற்கு முந்திய ஜனாதிபதித் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்சவிற்கெதிராக கச்சை கட்டிக்கொன்டு ஏனைய முஸ்லிம் மஹிந்த ஆதரவு கட்சியினரை ஆதரவாளர்களை துரோகிகளாக முஸ்லிம் விரோத ஆட்சியாளர்களுக்கு துணை போபவர்களாக காட்டி தீவிர பிரச்சாரம் பன்னிய வர்கள் அதே வேகத்தில் இப்போது ஒரு குத்துக்கரணம் அடித்துள்ளார்கள். நிறைவேற்று ஜனாதிபதி (Executive Presidency) முறை நீக்கப்பட வேன்டும்; அதற்கான உறுதியுரையை பொன்சேகா தந்துள்ளார்; ஒரு தனி மனிதரிடம் அதிகாரம் குவிந்திருக்கின்ற குடும்ப ஆட்சி நடத்தும் சர்வாதிகார மஹிந்த அரசை வீழ்த்தியே ஆகுவோம்; என்று சூளுரைத்தவர்கள் எதிபாராதவிதமாக சுடுதியான குத்துக்கரணம் அடித்து இப்போது தமது நிலைப்பாட்டு மாற்றத்துக்கு புதிய "நியாயங்கள்" கற்பித்து வருகிறார்கள். இதுபற்றி பல சுவாரஷியமான சங்கதிகள் அபிப்பிராயங்கள் வெளி வந்து கொன்டிருக்கும் வேளையில். சென்ற ஜனதிபதித் தேர்தலின் போது "ஜாதிக ஹெல உறுமய (புத்தரின்) போதனையில் மஹிந்தவின் 4 வருட சாதனைகளால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் !!! " என்ற தலைப்பிட்டு ஒரு நீன்ட துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது. (மேலும்) 02.09.10
________________________________________________________________________________________________
கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவினால் 10,000 வீடுகள்: நிருபமாராவ், முதலமைச்சர் சந்திப்பில் ஆராய்வு
கிழக்கில் இடம் பெயர்ந்த, மீளக்குடி யமர்த்தப்பட்ட, வீடுகளை இழந்தவர்களுக் கும் சுமார் 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நம்பிக்கை வெளியிட்டார். திருகோணமலையில் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார். இச் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை அமைப்பது தொடர்பாகவும் இடம் பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மீளக்குடியமர்த்தப்பட்ட வட பகுதி மக்களு க்கு இந்தியா சுமார் 51,000 வீடுகளை வழங் குகிறது. அதேபோல, கிழக்கு மாகாணத் திற்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரகாந்தன், நிருபமா ராவ் விடம் கேட்டுக் கொண்டார். முதலமைச்சரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இந்தியா இதற்கு சாதகமான பதிலை அளிக்கும் என உறுதியளித்தார்.
________________________________________________________________________________________________
வடபிரதேச மக்களின் உண்மையான பிரதிநிதிகள்
ஒப்பீட்டளவில் வடபகுதி இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை நாம் ஏற்றுக்கொண் டாக வேண்டும். அபிவிருத்தியில் பின்னடைவு. இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்தில் பின்ன டைவு. நிர்வாகக் கட்டமைப்பிலும் பின்னடைவு. அண்மைக்கால யுத்தமே இந்த நிலைக்குக் காரணம் என்று பொதுவாகக் கூறப்படுகின்றபோதிலும் இப்பிரதேசத்திலிருந்து காலத்துக்குக் காலம் தெரிவு செய்யப்பட்ட அர சியல் தலைமைகளின் தூர நோக்கற்ற செயற்பாடுகளே பிரதான காரணம். மற்றைய மாகாணங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தத்தமது பிரதேசத்தின் அபிவிருத்தியில் காட்டிய அக்கறையின் மிகச் சிறு பகுதியையாவது வட பிரதேச அரசியல் தலைவர்கள் காட்டவில்லை. அபிவிருத்தியில் வட க்கு பின்னடைவு கண்டதற்கு இது பிரதான காரணம். ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியில் அப் பிரதேச மக்கள் நேரடியாகச் சம்பந்தப்படக் கூடியதான நிர்வாகக் கட்ட மைப்பு பிரதான பங்களிப்புச் செய்யக்கூடியதாகும். மற்றைய மாகாணங்களில் இயங்கும் மாகாண சபைகள் இத்தேவையைப் பூர்த்தி செய்கின்றன. வடபகுதி அர சியல் தலைவர்கள் இத் தேவைக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்படாததால் மக்கள் நேரடியாகச் சம்பந்தப்படும் நிர்வாகக் கட்டமைப்பு அங்கு இல்லாமற் போனது. மாகாண சபை நிர்வாகத்தை நிராகரித்ததன் பாரதூரமான விளைவை இப்போதாவது அத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். (மேலும்) 02.09.10
________________________________________________________________________________________________
மாவோயிஸ்டுகளை விரட்டியடித்த கிராம மக்கள்
-சுதிர் சங்கர் சட்டோபாத்தியாயா
மத்தியப் படைகள் தாக்குதலால் கடுமையான சேதத்தை சந்தித்ததாலும் உள்ளூர் மக் களின் கடுமையான எதிர்ப்பை சந்திப்பதாலும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் இயக்கம், மேற்குவங்கத்தின் பஸ்சிம் மேதினிப்பூர், புருலியா மற்றும் பன்குரா மாவட்டங்களை சேர்ந்த ஜங்கல்மஹால் பகுதியில் தங்களின் செல்வாக்கை இழந்து வருவதாக தோன்றுகிறது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தப்பகுதியில் மாவோயிஸ்டுகள் செலுத்தி வந்த மிரட்டல் ராஜ்யம் தற்போது வலுவாக எதிர்கொள்ளப்படுகிறது. இந்தமுறை தாங்கள் யாருக்காக போராடிக் கொண்டிருப்பதாக மாவோயிஸ்டுகள் கூறுகிறார்களோ அந்த உள்ளூர் மக்களிடமிருந்து அவர்கள் சவாலை சந்திக்கிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளும் அவர்கள் தலைமை தாங்குகிற “போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் குழுவும் ஒவ்வொரு நாளும் கொலை, வழிப்பறி, பயமுறுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தனர். மக்கள் இவற்றையெல்லாம் அமைதியாக தாங்கிக்கொண்டார்கள். இல்லையேல் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் என்று சொல்லியும் போலீஸ் உளவாளி என்று சொல்லியும் மாவோயிஸ்டுகள் இவர்களை சுட்டுக்கொன்று விடுவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு கொலையையும் நியாயப்படுத்துவதற்கு இதைத்தான் அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். (மேலும்) 02.09.10
________________________________________________________________________________________________
கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்- திமுக
அது இலங்கைக்கே சொந்தம்-கிருஷ்ணா:
இந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கச்சத் தீவு, இலங்கைக்கே சொந்தம். அதை திரும்பப் பெற முடியாது. இரு அரசுகளுக்கிடையிலான அந்த புனிதமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. இலங்கை, நமது நட்பு நாடு. அந்த அம்சத்தை மனதில் கொள்வது அவசியம். மீன்பிடி விவகாரம் தொடர்பாக, கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியா-இலங்கை இடையே ஒரு புரிந்து கொள்ளல் ஒப்பநதம் ஏற்பட்டது. அதன்பிறகு, தமிழக மீனவர்கள் பிடிக்கப்படுவதும், சுடப்படுவதும் கணிசமாக குறைந்துள்ளது. 2008ம் ஆண்டு, 1,456 மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். ஆனால், 2009ம் ஆண்டு, அது 127 ஆகக் குறைந்தது. இந்த ஆண்டு ஜுலை மாதம்வரை, 26 மீனவர்கள் மட்டுமே பிடித்துச் செல்லப்பட்டனர். கடந்த 2008ம் ஆண்டு 5 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 2009ம் ஆண்டு, யாரும் கொல்லப்படவில்லை. நடப்பு ஆண்டில், ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்துள்ளது. எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் இலங்கை அரசின் கவனத்துக்கு அதை எடுத்துச் செல்கிறோம். ஆனால், அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று இலங்கை மறுத்து விடும். தங்களது கடற்படை, இந்திய கடல் பகுதிக்குள் நுழையவில்லை என்றும் கூறும். (மேலும்) 02.09.10
________________________________________________________________________________________________
இராக் போர் முடிந்தது; அடுத்த இலக்கு அல்-காய்தா: ஒபாமா பிரகடனம்
வாஷிங்டன், செப்.1: அமெரிக்க படைகளுக்கு இராக்கில் வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்குவதே முக்கியக் குறிக்கோள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதிபட தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நிகழ்த்திய உரையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். அவரது உரையின் சுருக்கம்: இராக்கில் சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் ஆட்சியை ஒடுக்க அமெரிக்க ராணுவம் 7 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்து போராடி வெற்றி கண்டது. "இராக் சுதந்திரம்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை அமெரிக்கா மட்டுமின்றி இராக் சரித்திரத்திலும் மிகவும் முக்கியமான காலமாகும். யுத்தம் முடிந்துவிட்டது. இப்போது இராக் மக்கள் நிம்மதியுடன் வழ்கின்றனர். தங்கள் நாட்டைக் காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றார் ஒபாமா. ஜனநாயகக் கட்சி பிரதிநிதியான ஒபாமா, முன்னாள் அதிபர் புஷ் நிர்வாகம் இராக் மீது போர் தொடுத்தபோது அதை எதிர்த்தார். இதனால் அதிபராக பொறுப்பேற்ற உடனேயே இராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். (மேலும்) 01.09.10
________________________________________________________________________________________________
ஆரியவதி பொய் சொல்கிறார் -சவுதி
தன்னை வேலைக்கு அமர்த்திய சவுதி வீட்டார் தனது உடலில் ஆணியை அறைந்து சித்திரவதை செய்ததாக ஆரியவதி என்ற சிங்களப்பெண் கூறும் குற்றச்சாட்டுகள் நம்பும்படியாக இல்லை என சவுதி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பொறுப்பான சவுதி அரச துறையின் தலைவரான, சாட் அல் படா ஆரியவதியின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை, மிரட்டும் நோக்கில் கூறப்படுபவை என்று கூறியுள்ளார். ஆரியவதி கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக சம்மந்தப்பட்ட சவுதி குடும்பத்தினரின் அண்டை வீட்டாரிடமிருந்து தமக்கு எவ்வித புகாரும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் சவுதியில் இருந்து நாடு திரும்பிய ஆரியவதியில் உடலில் இருந்து 13 ஆணிகளையும் ஊசிகளையும் கடந்த வாரம்தான் மருத்துவர்கள் எடுத்திருந்தனர். தற்போது கம்புருபிட்டிய மருத்துவவமனையில் அறுவை சிகிச்சை பெற்ற உடல் நலம் தேரி வரும் எல் ஜி ஆரியவதி தான் முன்பு கூறிய குற்றச்சாட்டுக்களை பிபிசியிடம் மீண்டும் தெரிவித்தார். ஆரியவதியின் உடலில் ஆணிகள் இருந்திருந்தால் விமான நிலையத்தில் உள்ள மெடல் டிடக்டர்கள் அதை கண்டுபிடித்திருக்கும் என்றும் சவுதி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இது குறித்து பேசிய ஆரியவதி, தன்னை இரவு இரண்டு மணிக்கு விமான நிலையத்துக்கு அழைத்துச் வந்ததாகக் கூறினார். தான் அங்கே பாதுகாப்பு சோதனைகளுக்காக வைக்கப்பட்டிருந்த கருவிகளை கடந்து சென்றபோது எச்சரிக்கை மணி ஒலித்ததாகவும் ஆனாலும் யாரும் தன்னை கேள்வி கேட்கவில்லை என்றும் அவர் பிபிசியிடம் கூறினார். இது பற்றி சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரை தொடர்பு கொள்ள நாம் மேற்கொண்ட முயற்சிகள் இது வரை பலனளிக்கவில்லை.
________________________________________________________________________________________________
கண்டி யாழ்ப்பாணம் ஏ9 வீதியை புனரமைக்க சீனா 350 கோடி டொலர்
கண்டியாழ்ப்பாணம் ஏ9 வீதியில் 32 கிலோமீற்றர் நீளப் பாதையை அபிவிருத்தி செய்வதற்கு 350 கோடி டொலர்களை (3.5 பில்லியன்) சீனா வழங்கவுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கிணங்க வட மாகாணத்தில் சீன நிதியுதவியுடனான பாரிய வீதிப் புனரமைப்பு திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் அநேகமான பகுதிகளை உள்ளடக்கியதாக இத்திட்டம் அமைவதுடன், நீண்ட காலமாக பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவியாக அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியாழ்ப்பாணம் ஏ9 வீதியானது 153 கி.மீ.நீளமாகும். கல்கமுவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான வீதியானது நவீனமயப்படுத்தப்படும். அத்துடன் இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்பருத்தித்துறை வீதி,புத்தூர்மீசாலை வீதி, யாழ்ப்பாணம்பளை வீதி என்பனவும் புனரமைக்கப்படவுள்ளது. மேலும் முல்லைத்தீவு கொக்கிளாய்புல்மோட்டை வீதி, ஒட்டுசுட்டான்நெடுங்கேணி வீதி, முல்லைத்தீவுபுளியங்குளம் வீதிகளும் வெவ்வேறான திட்டங்களின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கான மொத்த செலவினத்தில் 85% சீன அரசு வழங்கவுள்ளது. மீதி 15% செலவினத்தை இலங்கை அரசு செலவிடும்.
________________________________________________________________________________________________
தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்: நிருபமா ராவ்
கொழும்பு ஆக. 31: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார். இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். வவுனியாவில் உள்ள முகாமை அவர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் குறை, நிறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார். "எங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்; இயன்றவரை கண்டிப்பாகச் செய்வோம்' என்று உள்ளூர் மக்களிடமும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களிடம் அவர் உறுதி கூறினார். கொழும்பிலிருந்து விமானம் மூலம் வன்னி ராணுவ தலைமையகத்துக்குச் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செட்டிகுளத்தில் உள்ள முகாமை அவர் பார்வையிட்டார். வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 பதுங்கு குழிகளை அவர் பார்த்தார். வெடிக்காத கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர். அப் பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார். (மேலும்) 01.09.10
________________________________________________________________________________________________
ஜனாதிபதியின் பதவிக் காலம்
அரசியலமைப்புத் திருத்த மசோதா எதிர் வரும் 8ந் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்படவுள்ளது. மேற்கொள்ளவுள்ள திருத்தங்களுள் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர் பான திருத்தமே பரவலாகப் பேசப்படுகின்ற விடயம். இத் திருத்தங்கள் தொடர்பாக எதிரணிக் கட்சிகள் மத்தியில் ஒன்றுபட்ட நிலைப்பாடு இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதென அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை. இதுவரையில் மக்கள் விடுதலை முன்னணி மாத்திரம் எதிர்ப்பதாகக் கூறுகின்றது. இத்திருத்தம் எதிர்ப்புக்குரியதல்ல என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நின்று எதிர்ப்புத் தெரிவிப்பது வேறு. இரண்டு தடவைகளுக்கு மேல் பதவிக் கால த்தை நீடிக்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிப்பது வேறு. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒரு காலத்தில் பெரும்பாலான வர்களால் தீவிரமாக முன்வைக்கப்பட்ட போதிலும் இன்று அக்கோரிக்கை மீளாய்வுக்கு உட்பட வேண்டியதாக உள்ளது. (மேலும்) 01.09.10
________________________________________________________________________________________________
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டுள்ளேன்': பிடல் காஸ்ட்ரோ
வாஷிங்டன், ஆக.31: மரணத்தின் விளிம்புக்கே சென்று தான் மீண்டுவந்துள்ளதாக கியூபாவின் முன்னாள் அதிபரும், முதுபெரும் கம்யூனிஸ தலைவருமான பிடல் காஸ்ட்ரோ (84) உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான், மீண்டும் பிழைப்பேனா என்று நினைத்தேன். ஆனால் நான் மரணத்தை வென்றுவிட்டேன் என்றும் மெக்ஸிகோ நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார். பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது: உடல் நலம் பாதித்த போது நான் பிழைத்திடுவேனா, இல்லை இறந்திடுவேனா, மருத்துவர்கள் என்னை காப்பாற்றிவிடுவார்களா, இல்லை முடியாது என்று கையை விரித்திடுவார்களா என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால் உடல் மிகவும் மோசமடைந்த நிலையில் இருந்து மீண்டுவிட்டேன். உடல்நிலை தேறி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய நான் மீண்டும் வழக்கமான நிலைக்குத் திரும்ப கடுமையாகப் போராடினேன்.(மேலும்) 01.09.10
________________________________________________________________________________________________
செட்டியார் கட்டையடம்பனில் வன்னி இராணுவத்தளபதி வீடொன்றை கையளித்தார்.
மன்னார் படைத்தரப்பினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினை செட்டியார் கட்டை அடம்பன் பகுதியில் மீள்குடியேறிய குடும்பம் ஒன்றிற்கு வன்னி இராணுவத்தளபதி இன்று கையளித்திருக்கின்றார். கடந்த யுத்த சூழ்நிலையின் காரணமாக இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த பகுதியில் மீள் குடியேறிய மேற்படி குடும்பத்தினரின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டே படைத்தரப்பினர் இவ்வீட்டினை அக்குடும்பத்திற்கு வழங்கியிருக்கின்றனர். மன்னார் பிராந்திய கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயஸின் ஆலோசணைக்கு அமைவாக 215ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் விக்கும் லியனகே, சிவில் நிர்வாக அதிகாரி கேணல் நலிந்த மஹாவித்தாரண ஆகியோரின் வழிகாட்டலில் இராணுவத்தினரால் இவ்வீடு நிர்மானிக்கப்பட்டிருக்கின்றது. சகல அடிப்படை வசதிகளுடனும் நிர்மானிக்கப்பட்டிருக்கும்; இவ்வீட்டை கையளிக்கும் நிகழ்வில் வன்னிப்பிராந்தியத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமால் குணரத்தின கலந்து கொண்ட வீட்டினை சம்பிரதாய பூர்வமாக கையளித்திருக்கின்றார். (மேலும்) 01.09.10
________________________________________________________________________________________________
உத்தேச அரசியலமைப்பு திருத்தம்::ஜனநாயகம், இறைமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது- தமிழ்க்கட்சிகளுடனும் பேச்சு
உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்திற்கோ மக்களின் இறைமைக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாது. எதிர்க் கட்சி மற்றும் ஐ.ம.சு.மு. வில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதற்கு ஐ.தே.க. தனது ஆதரவை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். அரசியலமைப்பில் கட்டமைப்பு ரீதியான திருத்தங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர்கள் கூறினர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஐ.ம.சு.முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் ஆகியோர் இங்கு கருத்துத் தெரிவித்தனர். 1978 ஆம் ஆண்டு யாப்பினூடாக கடந்த 32 வருட காலமாக பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் புதிய யாப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு தேவையானவாறே இதில் திருத்தம் செய்யப்படுகிறது. (மேலும்) 01.09.10
________________________________________________________________________________________________
‘மழை நதி கடல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா
‘கவிஞனும் பேனாவால்தான் வாழ்கிறான் எழுதுவினைஞனும் பேனாவால்தான் வாழ்கிறான். ஆனால் எழுதுவினைஞன் தன் கடமைகளைச் சுமக்கிறான் கவிஞனோ உணர்வுகளைச் சுமக்கிறான்’
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இனியவன் இஸாறுதீனின் ‘மழை நதி கடல் ஹ என்ற கவிதை நூல் 91 புதுக்கவிதைகளோடும் கவிக்கோ அப்துல் ரகுமானின் அணிந்துரையோடும்; இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. இந்நூல் வெளியீட்டு விழா கடந்த 31. 07.2010 சனி அன்று மாலை 5.00 மணிக்கு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் கட்டார் பல்கலைக்ழகத் துணைப் பீடாதிபதி கலாநிதி – பேராசிரியர் - அல்ஹாஜ் எம். எம். தீன்முஹம்மத் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிரதம அதிதிகளாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ திருமதி சந்திரமணி விசுவலிங்கம் அவர்களும் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ அல்ஹாஜ் எம். எம். அப்துல்கபூர் அவர்களும் - கௌரவ அதிதியாக கல்முனை மாவட்ட நீதிபதி கௌரவ அல்ஹாபிஸ் என். எம். அப்துல்லாஹ் அவர்களும் - விசேட அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களும் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் இலக்கிய அதிதியாக கவிஞர் சோலைக்கிளி அவர்களும் முதல் மரியாதை அதிதிகளாக நூலாசிரியரின் தந்தை அல்ஹாஜ் ஏ.எல் முஹம்மது அலியார் அவர்களும் நூலாசிரியரின் மாமன் அல்ஹாஜ் ஜே. எம். ஷம்சுத்தீன் மவுலானா அவர்களும் கலந்துகொண்டார்கள். (மேலும்) 01.09.10
________________________________________________________________________________________________
இந்தியா உதவவில்லை -யாழ் மக்கள்
- பி.பி.சி செய்தி்
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவிடம், இலங்கைத் தமிழ் மக்களுக்குச் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை இந்திய அரசு செய்யத் தவறிவிட்டது என யாழ்ப்பாணத்தில் அவரை சந்தித்த தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை, அரசு தனது தேவைக்காகத் தமது காணிகளை எடுப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைத் தடுத்து, தமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இடம்பெயர்ந்துள்ள மக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். போர் நடைபெற்ற வேளையிலும், போருக்குப் பிந்திய வேளையிலும் தமிழ் மக்களின் நன்மை கருதி இந்திய அரசு எடுத்திருக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை அது மேற்கொள்ளவில்லை என யாழ்ப்பாணத்தில் அவரைச் சந்தித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் நடந்து முடிந்தவற்றை மறந்து, இனிமேல் நடக்க வேண்டிய விடயங்களில் இணைந்து செயலாற்றுவோம் என பதிலளித்துள்ளார். (மேலும்) 01.09.10
________________________________________________________________________________________________
புலிகளுக்கு ஆயுத கொள்வனவு செய்யதவர்கள் ஜேர்மனில் கைது
சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத கொள்வனவு மற்றும் பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என ஜேர்மன் வழக்குத் தொடுநர்கள் தெரிவித்தனர். ஜேர்மன் பிரஜைகளான சசிதரன் (33)இ ரி.கோணேஸ்வரன் மற்றும் இலங்கையரான விஜிகனேந்திரா (35) ஆகியோர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமொன்றைச் சேர்ந்தவர்கள் எனவும் சட்டத்தை மீறியதாகவும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேரும் கடந்த மார்ச் மாதம் ஐரோப்பிய யூனியனின் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆயுத கொள்வனவு செய்யதவர்கள். இவர்கள் ஜேர்மனின் மேற்குப் பிராந்திய பகுதியில் கைது செய்யப்பட்டனர். 2007 ஜூலை தொடக்கம் 2009 ஏப்ரல் வரை 3 மில்லியன் யூரோ பணத்தை ஜேர்மன் தமிழர்களிடமிருந்து விடுதலை புலிகள் ஆயுதம் மற்றும் ஏனைய பொருட்கள் கொள்வனவு செய்ய பரிமாற்றியதாக அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. வி.எஸ். விஜேகனந்திரா புலிகளின் வெளிநாட்டு செயற்பாட்டாளராகவும் செயற்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர்கள் எப்போது விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
________________________________________________________________________________________________
பூஸாவிலுள்ள 12 பல்கலை. மாணவர்களையும் விரைவில் விடுவிக்க ஜனாதிபதி சம்மதம். அமைச்சர் எஸ்.பி. தெரிவிப்பு
காலி, பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பன்னிரெண்டு பல்கலைக்கழக மாணவர் களையும் விரைவாக விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ நாயக்க நேற்றுத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நேற்றுக்காலை அவசரமாக கொழும்புக்குச் சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், மாலை மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டார். அங்கு வைத்தே அமைச்சர் இந்தத் தகவலைக் கூறினார்.அமைச்சர் திஸநாயக்க அங்கு மேலும் கூறியதாவது :பூஸா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் என்னிடம் விடுத்த கோரிக்கையை இன்று (நேற்று) அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியிடம் முன்வைத்தேன். அவர்களை உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளைத் தாம் எடுப்பதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்தார் என்றார்.இதேவேளை கைதுசெய்யப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவி துவாரகாவை விடுதலை செய்யுமாறு அவரது சகோதரியான வசந்தகலா வழங்கிய மகஜரைக் கையேற்ற அமைச்சர் திஸநாயக்க அவரை விடுவிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.
________________________________________________________________________________________________
கனடா செல்ல கப்பல் பயணத்திற்காக தாய்லாந்தில் காத்திருக்கும் தமிழர்கள்
நான்கு இலங்கைத் தமிழர்கள் தாங்கள் தாய்லாந்திற்கு விடுமுறையில் வந்திருப்பதாகக் கூறினர். ஆனால், தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு அறைக் குடியிருப்புக்கு வெளியே அவர்கள் அபூர்வமாகவே செல்கின்றனர். கட்டிலில் ஒன்றாக அமர்ந்தவாறு ஆங்கில படத்தை முடிவில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தாய்லாந்து மொழி அவர்களால் புரிந்துகொள்ள முடியாததொன்றாகும். தாய்லாந்திற்கு ஏன் வந்துள்ளீர்கள் என்று கேட்டால் உல்லாசப் பயணிகளாக என்ற பதிலை அவர்கள் கூறுகின்றனர். கடந்த வாரம் வந்தோம். அடுத்த வாரம் புறப்படவுள்ளோம் என்ற பாலசுப்பிரமணியம் என்று 25 வயதுடைய இளைஞர் கூறினார். ஆனால், அதற்கு மேல் ஆங்கிலத்தில் பேச முடியாது என அவர் கூறினார். ஆனால், ஆங்கிலத்தை அவர் நன்றாக விளங்கிக்கொள்வார் எனத் தென்பட்டது. பாங்கொக்கின் தென்பகுதியிலிருந்த 5 மாடிக் கட்டிடமானது வழமையாக ஆட்களைக் கவரும் இடமல்ல. அங்குள்ள மேலும் இரு அறைகளில் தமிழர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களைச் சுற்றுலாப் பயணிகள் எனக் கூறினர். நாலு பேர் உள்ள குடும்பம் ஒன்று அங்கிருந்தது. மற்றொரு அறையில் ஆட்கள் குழுவாகத் தங்கியிருந்தனர். (மேலும்) 31.08.10
________________________________________________________________________________________________
கொழும்பு நிர்வாகம் விரும்புவதையே ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் தமிழர்கள்"
இடிபாடடைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கும் கட்டிடங்களுக்கு அருகே அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் (யூ.என்.எச்.சி.ஆர்.) கூடாரங்கள் காணப்பட்டன. முற்றத்தில் ஆடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. சட்டி பானைகள், பைகள் ஆங்காங்கு காணப்பட்டன. அங்கு பொதுமக்கள் வாழ்வதைக் காட்டுவதாக இவை அமைந்திருந்தன. மன்னார் விவசாயிகளிடமிருந்து பெருமளவானவற்றை 30 வருட கால யுத்தம் அபகரித்துவிட்டது. இப்போதும் பாதுகாப்பு தொடர்பான உணர்வுக்காகக் காத்திருப்பவர்களாக அந்த விவசாயிகள் காணப்படுவதாக பி.பி.சி. சிங்கள செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அச் செய்திச் சேவையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது; "கவனமாக கதையுங்கள் பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்கின்றார்கள். வெளியாருடன் நாங்கள் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை என்று என்னை உபசரித்தவர்கள் எச்சரித்தனர். சோதனைச் சாவடிகளைத் தாண்டிச் செல்லும் சகல வாகனங்களும் படையினரால் மிக விழிப்புடன் சோதனையிடப்பட்டன. அவர்கள் களைப்புடன் காணப்பட்டாலும் நட்புறவுடன் இருப்பதாகத் தென்பட்டது. தெற்கிலிருந்து வரும் சிங்கள விருந்தினர் என அடையாளங்கண்டு கொண்டால் அவர்கள் விசேடமாக நட்புணர்வுடன் இருப்பதாகத் தோன்றியது. அவர்கள் தமது யுத்தம் தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருந்தனர். யுத்தம் மற்றும் அந்தப் பகுதியில் தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி அவர்கள் விபரித்தனர். இப்போதும் தங்களை வெற்றியாளர்களாக அவர்கள் பார்க்கின்றனர். (மேலும்) 31.08.10
________________________________________________________________________________________________
இலங்கையர்களை கடத்தி, படுகொலை செய்த மலேசிய காவல்துறை உத்தியோகத்தர் கைது
இலங்கையர்களை கடத்தி படுகொலை செய்த மலேசிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்று இலங்கையர்களை கடத்தில் அதில் ஒருவரை படுகொலை செய்துள்ளதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரையும் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட இலங்கையரின் சடலம் கைவிலங்கிடப்பட்டு, நிர்வாணமான நிலையில், சந்தேக நபரின் வீட்டுக்கு எதிரில் நின்ற வாகமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மற்றுமொரு இலங்கையர் கால் உடைந்த நிலையில் வாகனத்தில் இருந்தாகவும், மேலும் ஒருவரை கடத்தல்காரர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மலேசிய காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (மேலும்) 31.08.10
________________________________________________________________________________________________
நிரூபமா ராவைத் தொடர்ந்து ராணுவத் தளபதியும் இலங்கை விரைகிறார்
டெல்லி : மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவைத் தொடர்ந்து ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்கும் இலங்கை செல்கிறார். இலங்கையில் தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கை மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் நான்கு நாள் கொழும்பு பயணத்தை மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் ராணுவத் தளபதி வி.கே.சிங்கும் கொழும்பு செல்கிறார். அதேபோலே ராணுவத்தின் பல்வேறு மட்டத்திலான தளபதிகளும் இலங்கை செல்லவுள்ளனராம். அதேபோல இலங்கையிலிருந்தும் ராணுவ தளபதிகள் இந்தியா வருகின்றனராம். இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடலோரப் பாதுகாப்பு போன்றவை தொடர்பாக இந்த பயணமாம். ராணுவத் தளபதியைப் போலவே விமானப்படை தளபதி பி.வி.நாயக், பாதுகாப்புத் துறை செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரும் இலங்கை செல்லவுள்ளனர். கடந்த ஜூன் மாதம்தான் கடற்படைத் தளபதி நிர்மல் வர்மா கொழும்பு சென்று திரும்பினார் என்பது நினைவிருக்கலாம். வருகிற அக்டோபர் மாதம் இலங்கை ராணுவத் தளபதி இந்தியா வருகிறார். கருத்தரங்கில் பேசுவதற்காக அவர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த ஆண்டு இறுதியில் இலங்கை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
________________________________________________________________________________________________
தமிழகத்திலும் மாவோயிஸ்ட் வன்முறையைத் தூண்ட முயற்சி: கம்யூனிஸ்ட்டுகள் மீது முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை, ஆக. 30: சில மாநிலங்களில் உள்ளதைப்போல தமிழகத்திலும் மாவோயிஸ்ட் தாக்குதல், வன்முறை, கொலைவெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டு வருவதாக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "போர்முனைக்கு வாருங்கள்' என்று தி.மு.க.வோ, தி.க.வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில், அறவழியில் நடத்தி பழக்கப்பட்டவர்கள் நாங்கள். 1938-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது சென்னை தொண்டை மண்டல உயர் நிலைப் பள்ளி வாயிலில் அமைதியான முறையில் மறியல் செய்து கைதானர்களே தவிர, முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நமது கம்யூனிஸ்ட்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள்; பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள்; அதற்கடுத்து மறியல் என்பார்கள்; அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள். (மேலும்) 31.08.10
________________________________________________________________________________________________
கொழும்பின் சௌதியரேபியத் தூதரகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்
- பி.பி.சி
சௌதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்த சமயத்தில் உடலில் ஆணிகளும் ஊசிகளும் செலுத்தப்பட்டு ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சித்ரவதைப் செய்யப்பட்டிருந்ததைக் கண்டித்து கொழும்பிலுள்ள சௌதி தூதரகம் முன்பு ஓர் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. சௌதி அரேபியாவுக்கு செல்லுகின்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை சௌதி அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள சௌதி தூதரகம் முன்பு பெருந்திரளாகக் கூடி நின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டதோடு பலவித வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். ஆரியவதிக்கு நடந்தது போன்ற கொடுமை வேறு எவருக்கும் நடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சௌதி அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை வலியுறுத்துவது இவர்களுடைய ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு சௌதி தூதரகம் முன்பு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. (மேலும்) 31.08.10
________________________________________________________________________________________________
அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் 8ஆம் திகதி: பாராளுமன்றத்தில் 160 எம். பிக்களின் ஆதரவு கிடைக்குமென்கிறார் மைத்திரிபால
ஜனாதிபதியாக 2 தடவை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தற்போதைய யாப்பில் வரையறுக்கப் பட்டுள்ளது. ஆனால் மக்கள் குறித்த நபர் தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும். அதற்கேற்ப ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடியவாறு அரசியல் யாப்பு திருத்தப்படவுள்ளது. இதனூடாக மக்களின் இறைமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும். இதேநேரம் 17ஆவது திருத்தச் சட்டத்திலும் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2001ம் ஆண்டில் ஜே.வி.பி.யுடன் இணைந்து அமைக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 17ஆவது திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது. அதில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றைத் திருத்துவது மிக அவசியம். 978ஆம் ஆண்டு யாப்பில் உயர் பதவிகளுக்கு நியமனம் வழங்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2001ல் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் படி அந்த அதிகாரம் ஜனாதிபதி, பிரமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், சிறுகட்சிகள் என கட்சி பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தாமதம் காரணமாக அரசியலமைப்பு சபையை இயங்க வைக்க முடியாமல் போனது. (மேலும்) 31.08.10
________________________________________________________________________________________________
இந்திய வெளியுறவு செயலாளர் கிழக்கு மாகாண முதலமைச்சரும் சந்திப்பு
இன்று இலங்கை வரும் இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவும் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் முதாலாம் திகதி சந்நித்துப் பேசவுள்ளார் என அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இச்சந்திப்பு திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக முதலமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண அபிவிருத்தி, மீள் குடியேறிய மக்களின் பிரச்சினைகள், தற்போதைய நிலவரம் என்பன குறித்து இருவரும் பேசவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
________________________________________________________________________________________________
வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமம் : முல்லைத்தீவு மக்களை விரைவில் மீளக் குடியமர்த்துமாறு பசில் பணிப்பு
வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8607 குடும்பங்களையும் துரிதமாகக் குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் நேரில் சென்ற அமைச்சர் பசில் ராஜபக்ஷ மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்து ரையாடியுள்ளதுடன், மீள் குடியேற்றம் தொடர்பான சகல அதிகாரிகளுக்கும் விசேட பணிப்புரைகளையும் வழங்கியுள்ளார். இச்சந்திப்பு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றதுடன் இதன் போது மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை யைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப் பட்டவர்களைக் கேட்டுக் கொண்ட அமைச்சர் கண்ணிவெடி அகற்றிய பகுதிகளில் உடனடியாக மீள் குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார். மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் நிவாரணங்களைத் தாமதமின்றி பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளைப் பணித்துள்ள அமைச்சர்; தற்காலிக வீடுகள் அமைப்பதை நிறுத்தி விட்டு அவர்களுக்கான நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
________________________________________________________________________________________________
மூன்று லட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன
வடக்கு கிழக்கில் புதைக்கப்பட்ட மூன்று லட்சம் கண்ணி வெடிகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து இராணுவப் பேச்சாளர் உபய மெதவல கூறியிருப்பதாவது, விடுதலைப் புலிகளிளால் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள் பெரும்பாலானவை இதுவரை அகற்றப்பட்டுள்ளன. அதன்படி, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்த 1813 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏழு அரச சார்பற்ற நிறுவனங்களும் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும் கூறியுள்ளார்.
________________________________________________________________________________________________
மதவெறிப் பிரச்சாரம்!
-அருணன்
தினமணி (26.8.10) ஏட்டில் பாஜக தலைவர் இல.கணேசன் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் தனக்குள்ள முஸ்லிம் வெறுப்பைக் கக்கியுள்ளார். காஷ்மீர் தொட்டு தென்காசி வரை வந்திருக்கிறார். அவ்வளவிலும் அதே துவேஷம். “இப்போது மன்மோகன் சிங் காஷ்மீருக்கு சுயாட்சி தருவோம் என்கிறார். பாகிஸ்தானுக்கு வேலையே இல்லாமல் அல்வாத்துண்டு போல வெள்ளித்தட்டில் வைத்து வழங்க இசைந்துவிட்டாரே!”- என்று இல.கணேசன் பொருமியிருக்கிறார். காஷ்மீருக்கு மாநில சுயாட்சி தருவது எப்படி அந்தப் பகுதியைப் பாகிஸ்தானுக்கு கொடுப்பதாகும்? பாஜகவுக்கு கூட்டாட்சி முறையில் நம்பிக்கை கிடையாது. அதனுடைய கனவெல்லாம் ஒற்றையாட்சி முறைதான் என்பதை இது அம்பலப்படுத்துகிறது. விஷயம் என்னவென்றால், நமது அரசியலமைப்புச்சட்டத்தின் 370வது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு இதர இந்திய மாநிலங்களை விடவும் கூடுதல் சுயாட்சி வழங்கியுள்ளது. காரணம், அந்த அடிப்படையில்தான் ஜம்மு-காஷ்மீரை இந்தியாவோடு இணைக்க 1947 அக்டோபரில் ஒப்புக்கொண்டார் (மேலும்) 31.08.10
________________________________________________________________________________________________
உலகத்தை பயமுறுத்தி, பீதியில் ஆழ்த்த பின்லேடன் பயன்பட்டார் - அமெரிக்கா மீது கேஸ்ட்ரோ குற்றச்சாட்டு
அல்கொய்தா தலைவர் பின்லேடனை சி.ஐ.ஏ. (உளவுத்துறை) ஏஜெண்டாக இருப்பதற்காக அமெரிக்கா விலைகொடுத்து வாங்கி உள்ளது என்றும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ் உலகத்தை மிரட்டி வைப்பதற்காக பின்லேடனை பயன்படுத்திக்கொண்டார் என்றும் கிïபா நாட்டின் முன்னாள் அதிபர் கேஸ்ட்ரோ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அந்த நாட்டின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- பின்லேடன் ஒரு சி.ஐ.ஏ. ஏஜெண்டு என்பதையும் அவர் அமெரிக்காவின் கருவியாக செயல்பட்டார் என்பதையும் சமீபத்தில் இணையதளத்தில் வெளியான ஆவணங்கள் நிரூபிக்கின்றன. புஷ் பீதியை கிளப்ப விரும்பிய போதெல்லாம், பின்லேடன் இணையதளத்தில் தோன்றி மிரட்டல் விடுவார். புஷ்சுக்கு பின்லேடன் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வந்தது. விக்கிலீக்ஸ் டாட் ஆர்க் இணைய தளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் பின்லேடன் சி.ஐ.ஏ.ஏஜெண்டாக செயல்பட்டார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. இவ்வாறு கேஸ்ட்ரோ கூறினார்.
________________________________________________________________________________________________
விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் எரித்திரியாவில் பாதுகாக்கப்படுகின்றன
- பேராசிரியர் சேனக ஜயசேகர தகவல்
தனி இயந்திரங்களைக் கொண்டு இயங் கக் கூடிய ஆறு விமானங்களை புலிகள் எரித்தியாவில் பாதுகாப்பதாக சர்வதேச பயங்கர வாத ஒழிப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் சேனக ஜயசேகர தெரிவித்துள்ளார்.பேராசிரியர் சேனக ஜயசேகர பயங்கர வாத ஒழிப்பு மற்றும் புலனாய்வுத் தொடர்பான சிட்னி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். அவர் இது தொடர் பில் மேலும் தெரிவித்ததாவது, தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு குமரன் பத்மநாதன் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே திகழ்வ தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் குமரன் பத்மநாதன் தொடர்ச்சியாக உறவுகளைப் பேணிவருவதாக அவர் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன், ராஜன் மற்றும் எம்.வீ.கிறிஸ்டியானா கப்பல் ஆகியவற்றை கைது செய்தமை இலங்கை பாதுகாப்புத் தரப்பு எய்திய மிகப்பெரிய வெற்றிகளாக கருதப்படவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மொத்த சொத்துக்களை மதிப்பீடு செய்வதில் சிக்கல் நிலைமை காணப் படுவதாகவும் அனேகமான சொத்துக்கள் மறைக்கப்பட்டு அல்லது வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தலைவர் ரெஜியிடம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுகின்றன. (மேலும்) 30.08.10
________________________________________________________________________________________________
லட்சக்கணக்கில் தினமும் யாழ் குடா நோக்கி சுற்றுலா பயணிகள் வருகை
வடபகுதி நோக்கி சுற்றுலாப் பயணிகளாகப் படையெடுத்து வருகின்றனர். தினமும் யாழ்.குடாநாட்டிற்கு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு வருவதாக யாழ் மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகளைச் சமாளிக்கக்கூடிய வசதிகள் குடாநாட்டில் இல்லை எனவும் இதனால் வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போர் முடிந்த பின்னர் உருவாகியிருக்கும் புதிய சூழலில் சுற்றுலாப்பயணிகளாக வடபகுதிக்குப் பெருமளவில் சிங்கள மக்களும் புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழ் மக்களும் வந்தவண்ணம் இருக்கின்றனர்.இதனால் குடாநாட்டில் சனத் தொகை திடீரென அதிகரித்திருக்கிறது. திடீரென அதிகரித்திருக்கும் சனத்தொகைப் பெருக்கத்தினால் போக்குவரத்து நெருக்கடிகளும் நகரப் பகுதியில் எதிர்பாராத வகையிலான சனநெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கடைகளிலும் சந்தைகளிலும் பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கின்றன. இதனால் உள்ளூர் உணவுப்பொருட்கள், பழங்கள், கைவினைப்பொருட்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. (மேலும்) 30.08.10
________________________________________________________________________________________________
எமது ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கை மக்களின் பெரும் துன்பத்துக்கும் கெடுதிக்கும் நாம் காரணமாகினோம். இதற்காக இலங்கையர்களை எல்லோரிடமிருந்து மனதார மன்னிப்புக்காக இறைஞ்சுகின்றேன்.
- குமரன் பத்மநாதனை (கே.பி.)
“ முதலாவது எனது தமிழ் உறவ ுகளுக்கு நான் சொல்வது இதுதான்: போர் முடிந்துவிட்டது. பிரபாகரன் மாற்றும் சிரேஷ்ட தலைவர்கள் எம்மோடு இல்லை. தமிழ் ஈழம் ஒரு தோற்றுப்போன இலட்சியம். ஆயுதப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்னும் பொறுப்பில்லாதவர்கள் கூற்றை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். தயவு செய்து மோதல் மனப்பாங்கை விட்டொழித்து உடைந்துப்போன எமது மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுங்கள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடமும் வீணான அலங்காரப்பேச்சுகளை தவிர்த்து, அதற்கு பதிலாக இலங்கைத் தமிழர்கள் ஏனையோருடன் இணைந்து செழிப்புடனும் ஒத்திசைவுடனும் வாழ உதவுங்கள் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு இணக்கப்பாடும் ஒத்துழைப்பும்தான் தேவை. மோதலும் முரண்பாடும் தேவையில்லை.” “எனது இலங்கை உறவுகளுக்கானது. எல்.ரீ.ரீ.ஈ ஐ சேர்ந்த நாங்களும் வேறு போராட்டக் குழுக்களும் எமது இழந்துப்போன உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தை தொடங்கினோம். நாம் தமிழ் ஈழம்தான் இதற்கு விடை என நினைத்தோம். அந்த இலட்சியம் எமது வழிமுறைகளை நியாயப்படுத்தும் என நினைத்தோம். எமது ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கை மக்களின் பெரும் துன்பத்துக்கும் கெடுதிக்கும் நாம் காரணமாகினோம். சிலவேளைகளில் நாகரீகமடைந்த நடத்தையில் எல்லா நியமங்களையும் பார்க்கும்போது நடந்தவற்றையிட்டு அதிர்ச்சியடைவேன். (மேலும்) 30.08.10
________________________________________________________________________________________________
துறைமுக அதிகார சபை ஏல விற்பனை: பாதாள உலக கோஷ்டியின் மிரட்டல் - பொலிஸ், இராணுவத்தால் முறியடிப்பு
துறைமுக அதிகார சபையின் ஏல விற்பனை நடவடிக்கைகள் கடந்த வார இறுதியில் இடம்பெற்றபோது பொலிஸாரும் இராணுவமும் இணைந்து மேற்கொண்ட முற்றுகையின் போது பாதாள உலகத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் பாதாள உலக தொடர்புகளுடன் கூடியவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேற்படி ஏல விற்பனையை பாதாள உலக கோஷ்டியொன்று தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அதனையடுத்து அவர் படையினருக்கும் பொலிஸாருக்கும் ஏல விற்பனை சுமுகமாக நடைபெறும் சூழலை ஏற்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அதனையடுத்தே மேற்படி முற்றுகை இடம்பெற்றுள்ளது. ஏல விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் விலைகள் குறிப்பிட்ட பாதாள உலக கோஷ்டிக்கு முன்னரே கிடைத்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மிரட்டல் நடவடிக்கைகள் மூலம் அப்பொருட்கள் தமக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் பாதாள கோஷ்டியினர் செயற்பட்டதாக கூறப்படுகிறது. பாதாள கோஷ்டியினர் குறிப்பிடும் விலையை விட அதிகமாக கேட்பவர் தாக்கப்படுவார் அல்லது அந்த இடத்தில் இருந்து விரட்டப்படுவார் அல்லது அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படும். (மேலும்) 30.08.10
________________________________________________________________________________________________
நிருபமா ராவ் இன்று இலங்கை பயணம்
சென்னை, ஆக.29: இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் 3 நாள் பயணமாக இலங்கைக்கு திங்கள்கிழமை செல்கிறார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து ஓராண்டுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்யவுள்ளார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பகுதிகளுக்கு நிருபமா ராவ் செல்கிறார். தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் இந்திய அரசின் திட்டம் குறித்தும் இந்தப் பயணத்தின் போது அவர் ஆய்வு செய்ய உள்ளார். தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.க்களை கொழும்பில் புதன்கிழமை (செப்டம்பர் 1) சந்தித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். அடுத்த மாத இறுதியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை செல்ல உள்ள நிலையில், நிருபமா ராவின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையில் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசு 500 கோடியை வழங்கியது. (மேலும்) 30.08.10
________________________________________________________________________________________________
15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நால்வர் கைது
மன்னார் பஸ் நிலயத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த 15 வயதுடைய சிறுமியை, பலவந்தமான முறையில் அருகிலுள்ள மலசலகூடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று மாலை 4.30 மணியளவில் பஸ்ஸிற்காக காத்திருந்த குறித்த சிறுமியை 3 இளைஞர்கள் பலவந்தமாக அருகாமையிலுள்ள பொது மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதுடன், அச்சிறுமியை கையடக்க தொலைபேசி மூலம் படம் பிடிக்கவும் முயன்றுள்ளனர். அப்போது குறித்த சிறுமி சத்தமிட்டதை அடுத்து, அப்பகுதியில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்க, பொலிஸாரும் அவ்விடத்துக்கு விரைந்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதான மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ள பொலிஸார் சமபவத்துக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு இளைஞரையும் சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து கைது செய்துள்ளனர். மேற்படி சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த பொலிஸார், அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
________________________________________________________________________________________________
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே.... அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே....
எழுதுவது தேசியத்தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் சயனைட் குப்பியை கடிக்காமல் எதிரியின் கையால் கொல்லப்பட்டதையடுத்து வெளிநாடுகளிலிருக்கும் அவரது ஆதரவாளர்கள் யாரை எங்கே வைப்பது என்று தெரியாமல் பலத்திக்கிலும் பிரிந்து ஒருவரை ஒருவர் துரோகிப்பட்டம் சூட்டிக்கொண்டு வழிதெரியாமல் விழிபிதுங்கி நிற்கும்போது.... நாம்தமிழர் இயக்கத்தலைவர் சீமான் ஈழத்தமிழர்களுக்காக சிறையில் வாடிக்கொண்டிருக்கும்போது.... வைக்கோ தான் யுத்தத்தை நடத்த சொல்லவில்லை என கண்கலங்கும் வேளையில் இங்கே ஆலோசகரதும் தேசியத்தலைவரதும் பெயரில் நடமாடும் வானொலி அறிவிப்பாளர்தான் இன்றைய நிலையில் தமிழ்த்தேசியத்தின் பாதுகாவலராக மாறியிருக்கிறார். ஆஸ்திரேலிய தமிழர் பேரவை எண்டாங்கள்..... வட்டுக்கோட்டை தீர்மானம் எண்டாங்கள்.....நாடுகடந்த தமிழ் ஈழம் எண்டாங்கள்.....ஆனால்.... ஒன்றுமே ஈழத்தமிழர்களுக்காக நடக்கவில்லை. (மேலும்) 29.08.10
_________________________________________________________________________________________________
புலிகள் மீதான தடை தேவையா? கருத்தறிய டில்லியில் விசாரணை
புதுடில்லி: இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை இனியும் தேவையா? இதுபற்றிய மக்கள் கருத்து என்ன? என்பதை அறிய வெள்ளிக்கிழமை மாலை டில்லியில் நடந்த விசாரணையில் தமிழ் உணர்வாளர்கள் என்று கூறப்படும் ஒரு தலைவர் கூட ஆஜராகவில்லை. பா.ஜ.க. தரப்பிலிருந்து ஒருவர் மட்டும் ஆஜராகி புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது கடந்த 20 ஆண்டுகளாக தடையுள்ளது. இந்தத் தடை தொடர வேண்டுமா... புலிகள் அமைப்புப் பற்றிய இந்தியாவின் வருங்கால நிலை என்னவாக இருக்கவேண்டுமென்பது பற்றி முடிவெடுக்க இந்திய உள்துறை அமைச்சர் வெள்ளி மாலை 3.30 மணிக்கு டில்லியில் மேல் நீதிமன்ற நீதிபதி விக்ரம்சிங் குப்தா தலைமையில் ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தது. விடுதலைப் புலிகள் விடயத்தில் மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்கான இந்தப் பொது விசாரணை டில்லி மேல் நீதிமன்றம் எண் 2 இல் நடந்தது. இந்தப் பொது விசாரணைக்கு தமிழகத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் கூட எட்டிப்பார்க்கவில்லை. தமிழகத்திலிருந்து பா.ஜ.க. வைச் சார்ந்த ஒருவர் மட்டும் கலந்துகொண்டார். அவர் தனது கருத்தைக் கூறும்போது;விடுதலைப் புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. இதனால், இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது தடைவிதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. இல்லாத ஒரு இயக்கத்தை நினைத்து எதற்காக அச்சப்பட வேண்டும்? என்று வாதாடினார். இந்த விசாரணையில் ஒருவரைத் தவிர வேறு யாரும் கலந்துகொள்ளாததால் அடுத்த மாதம் 21 ஆம் திகதி சென்னையிலோ அல்லது டில்லியிலோ இந்த விசாரணையை மீண்டும் நடத்த நீதிபதி முடிவு செய்துள்ளார்.
_________________________________________________________________________________________________
யோகா காப்புரிமைக்கு எதிர்ப்பு
பி.பி.சி
யோகா திருட்டு என்று தாங்கள் வருணிக்கும் ஒரு விஷயத்தைத் தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான ஆசனப் பயிற்சிகளை விளக்கும் வீடியோ தொகுப்பு ஒன்றை இந்திய அரசாங்கம் சர்வதேச அறிவுசார் காப்புரிமை பதிவகத்திடம் வழங்கவுள்ளது. இந்தியப் பாரம்பரியத்தில் வருகின்ற யோகா பயிற்சியை அமெரிக்காவில் சில நிறுவனங்கள் தங்களுடைய வடிவத்துக்கு மாற்றி அவற்றுக்கு காப்புரிமை பெற முயலுகின்றன என்று கவலைகள் எழுந்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை வருகிறது. ஆனால் யோகா என்பது மானுடம் மொத்தமும் பகிர்ந்துகொள்ள வேண்டிய விடயம் என்று இந்தியா கருதுகிறது. யோகா என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகிறது. உடல் நலத்தைப் பேணுவதற்கான ஒரு கருவியாக அமெரிக்காவிலும் இது சில காலமாக பிரசித்தி பெற்று வருகிறது. அங்கே சில நிறுவனங்கள் யோகத்தின் சில ஆசனங்களிலும் பயிற்சிகளிலும் தங்களது வடிவமைப்பைச் சேர்த்து அது தங்களுடையதுதான் என்பதாக அறிவுசார் காப்புரிமை பெற முயற்சித்துள்ளன. ஆனால் நாய் சோம்பல் முறிப்பது போன்றது மாதிரியான அதோ முக ஸ்வநாசனா, சூரிய நமஸ்காரம் மற்றும் பிற ஆசனப் பயிற்சிகள் எல்லாம் உலகத்துக்கு பொதுவான அறிவுத் தொகுதியின் ஒரு அங்கம் அவற்றுக்கு எல்லாம் எந்த ஒரு நிறுவனமும் உரிமை கோர முடியாது என்று இந்தியாவின் பாரம்பரிய ஞானத்துக்கான டிஜிட்டல் கருவூலகம் தெரிவிக்கிறது. (மேலும்) 29.08.10
_________________________________________________________________________________________________
அதிக மிருகங்களை பலியிட பொலிஸாரே காரணம்: தேசிய பிக்கு முன்னணி
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்தரகாளி அம்மன் கோவிலில் கடந்த புதன்கிழமை நடாத்தப்பட்ட மிருக பலி பூசையினை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பொலிசார் அதிகமான மிருகங்கள் பலியிடப்படுவதற்கு உந்துசக்தியாக இருந்தனர் என தேசிய பிக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஹெடில்லே விமலசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த மிருக பலி பூசைக்கு எதிராக தேசிய பிக்கு முன்னணி ஏற்பாடு செய்த அமைதியான பாதயாத்திரைக்கும், சத்தியாக்கிரகத்திற்கும் இடையூறு விளைவித்து பொலிசார் நடந்து கொண்ட விதம் அனுமதிக்க முடியாத ஒன்று என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்து மதத்தின் பெயரால் சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை அதிக எண்ணிக்கையிலாக ஆடுகளும், கோழிகளும் பலியிடப்பட்டுள்ளன. பௌத்த விகாரைக்குச் சொந்தமான இடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலில் இவ்வாறான சம்பவம் வருடந்தோரும் இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும். சமயத்தின் பெயரால் செய்யப்படும் இவ்வாறான பாவச் செயலைத் தடுத்து நிறுத்துமாறும், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் கோரி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம். அப்போது பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கா உடன் கலந்துரையாட சந்தர்ப்பம் ஏற்படுத்தி தரப்பட்டது. (மேலும்) 29.08.10
_________________________________________________________________________________________________
நிராஜ் டேவிட்: காலம் கடந்த ஞானம் பட்ட பின்பு வந்து என்ன பிரயோசனம்.
- புதியவன்
புலிகளின் இணையத்தளங்களில் நிராஜ் டேவிட் எழுதிய பல கட்டுரைகளை முன்பு படித்திருக்கிறேன். பொதுவாக அவர் ராஜதந்திரம் சாணக்கயம் போன்ற பதங்களை தனது கட்டுரையில் பயன்படுத்தி வருவதை பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இறுதியாக எழுதியிருக்கின்ற கட்டுரையில் அவர் புலிகள் விட்ட தவறுகளை தமிழர்களின் தலையில் போட்டு இனி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். புலிகள் தொடர்பான விமர்சனம் மாற்றுக்கருத்தாளர்கள் மத்தியில் இன்று எழுந்துள்ள விடயமல்ல. புலி இயக்கம் உருப்பெற்ற காலத்திலிருந்து தமிழ்மக்களிடையே இருந்து இடதுசாரிக் கருத்துக்கொண்டவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த விமர்சனம் தொடர்பாக புலிகள் எந்த சமயத்திலும் அலட்டிக்கொண்டதில்லை. புலிகளால் இடதுசாரிகளும் இடதுசாரி கருத்துக்களை முதன்மைப்படுத்தி போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களும் அழித்தொழிக்கப்பட்டன. இந்து சமிக்ஞைதான் புலிகளுக்கெதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் மேற்கொள்ளாமல் இருந்தமைக்கு முக்கிய காரணமாகும். புலிகள் தங்குதடையின்றி தமது போராட்டத்திற்கான நிதிவளத்தையும் பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவும் மேற்குலகின் மறைமுக ஆதரவு பெருமளவில் உதவியது. (மேலும்) 29.08.10
_________________________________________________________________________________________________
Sports out of Politics at Last
For the first time in their history TSSA advertise their Sports events on bank holiday 30th August 2010 on lankaenews/sinhala media the main sponsors of the TSSA event also joined with Srilankan Airlines and Bank of Ceylon to promote another event on 11th September 2010.
This is a turning point in the life of Srilankans in UK having a sports event that is organised without political influence. Let us welcome this transformation in our community as the first step in the progressive thinking for a better and prosperous future of our community.
Every one of us must take this opportunity to thank these courageous business leaders for their vision and commitment towards our nation. For the first time in our living memory we have the chance to show our sportsmanship and our true colours without the interference.
Come and celebrate the new era in the life of Srilankans community in UK
On the 30th August TSSA event in warrEn Farm for the details please visit the Link (http://www.lankaenews.com/Sinhala/)
&
11th September at Osterley Cricket Club, please see the attachment
Say no to Terrorism
Welcome the Community Sprit.
We welcome the TSSA decision to extend their invitation to all communities and the same time appreciate the business community sponsoring the cricket fiesta for the whole community
Good Luck and God Bless our Community
_________________________________________________________________________________________________
வைகோவை அதிரவைத்த கே.பியின் குண்டு
கே. பி என்ற குமரன் பத்மநாதன் தூக்கிப் போட்ட ஒரு குண்டு வைகோவின் காலடியில் வெடித்திருக்கின்றது. புலிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது யுத்தநிறுத்தம் ஏற்படுவதை வைகோ தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தடுத்துவிட்டார் என்று இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் கே. பி கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு வைகோவை நெருக்கடியான ஒரு நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கின்றது. சுய அரசியல் லாபத்துக்காகவே வைகோ இப்படிச் செய்தார் என்று கருணாநிதி பக்கத்திலிருந்து ஒரு குரல் எழுகின்றது. யுத்தநிறுத்தம் ஏற்பட்டால் அதற்கான கெளரவம் காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் கிடைத்துவிடும் என்பதற்காகவே வைகோ தடையாகச் செயற்பட்டார் என்ற ஒரு கருத்து இப்போது தமிழ்நாட்டில் வலம் வருகின்றது. இதன் நதிமூலம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பணிமனையான அண்ணா அறிவாலயம். தமிழ் நாட்டில் அடுத்த வருடம் மே மாதம் சட்ட சபைத் தேர்தல் நடக்கவிருக்கின்றது. இந்த நேரத்தில் இப்படியான குற்றச்சாட்டு தன்னைப் பாரதூரமாகப் பாதிக்கும் என்பதை உணர்ந்த வைகோ கே. பியின் குற்றச்சாட்டை ஆக்ரோஷமாக மறுக்கிறார். (மேலும்) 29.08.10
_________________________________________________________________________________________________
மு.காங்கிரஸ் எமக்கு அறிவிக்கவில்லை'- ஐ.தே.க
- பி.பி.சி
மு.காங்கிரஸ் கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டமைத்து போட்டியிட்டது அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேவையான நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர் கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு குறித்து ஊடகச் செய்திகள் மூலமே தாம் அறிந்து கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பிபிசியிடம் குறிப்பிட்டார். இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய பிரதமர் தலைமையிலான மந்திரிசபை முறையை கொண்டுவருவதே தமது கட்சியின் நிலைப்பாடாக உள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸும் ஆரம்பத்திலிருந்து இந்த நிலைப்பாட்டிலேயே இருந்ததாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார். இந்த விடயம் குறித்து அடுத்த வாரத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, ‘குடும்ப நல’ அரசியலமைப்புத் திருத்தத்திற்குப் பதிலாக மக்கள் நல அரசியலமைப்புத் திருத்தத்தையே வலியுறுத்துவதாக கூறியுள்ளது. அரசாங்கம் எவ்வாறான திருத்தங்களை அரசியலமைப்பில் மேற்கொள்ள தற்போது உத்தேசித்துள்ளது என்பது பற்றி உத்தியோகபூர்வமாக எந்த அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார். (மேலும்) 29.08.10
_________________________________________________________________________________________________
அதிகாரப்பகிர்வு, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் வலியுறுத்திக் கருத்து
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கலின் மூலம் தீர்வு காணப்படவேண்டுமென்பதில் நாம் உறுதியாகவுள்ளோம். அத்துடன் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்காக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதற்கும் நாம் ஆதரவளிக்கின்றோமென இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா கொலுரே தெரிவித்தார். இலங்கை கம்யூனிட்ஸ் கட்சியின்மூன்று நாள் தேசிய மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை நாரஹென்பிட்டி தாரிக்கா மண்டபத்தில் ஆரம்பமானது. கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் டியூ.குணசேகர கட்சிக் கொடியை ஏற்றி மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். இங்கு ஆரம்ப உரையை நிகழ்த்துகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த ராஜா கொலுரே மேலும் கூறியதாவது; எமது கட்சி ஆரம்பித்தது முதல் 1948 வரை சுதந்திரத்துக்காகப் போராடியது. கடும் கஷ்டங்கள், பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றது. பின் ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடினோம். நாம் முக்கிய தீர்மானமொன்றை எடுத்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முன்னணி அமைத்தோம். இதில் முற்போக்கு சக்திகள் மற்றும் இடதுசாரிகள் ஒன்றுபட்டனர். இதிலும் வெற்றி கண்டோம். 1970 மற்றும் 1994 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் உடன்பாட்டினை மேற்கொண்டு முன்னணி அமைத்து எமது கொள்கையினை முன்னெடுத்துச் சென்றோம். ஜனநாயகத்தையும் ஐக்கியத்தையும் நாட்டில் ஏற்படுத்த முற்போக்கு சக்திகளுடன் ஒன்றுபட்டு ஐ.தே.க. அரசை நீக்கப்போராடினோம். (மேலும்) 29.08.10
_________________________________________________________________________________________________
யூத இனத்தை சேர்ந்தவரா ஹிட்லர்?ஆய்வில் அதிர்ச்சி தகவல்
லண்டன்:சர்வாதிகாரி ஹிட்லர் யூத இனத்தை சேர்ந்தவராக இருக்கலாமென ஆய்வில் தெரிய வந்துள்ளது.இரண்டாம் உலகப் போரின் போது, லட்சக்கணக்கான யூதர்களை கொடூரமாக சித்ரவதை செய்து, கொன்று குவித்தவர் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர்.ஜெர்மானியர்கள் தான் உயர்ந்தவர்கள் என கூறிக் கொண்டு , யூத இனத்தையே அழிக்க நினைத்தார் ஹிட்லர். ஆனால், அவரே யூத இனத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தற்போது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. புலனாய்வு பத்திரிகையாளரான ஜேன் பால் முல்டர் என்பவர் இது குறித்து ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். நியூயார்க்கில் வசித்து வரும் ஹிட்லரின் உறவினர்கள் அலெக்சாண்டர் ஸ்டூவர்ட் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்திரியாவை சேர்ந்த நார்பர்ட் உள்ளிட்ட உறவினர்கள் 39 பேரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், வட ஆப்பிக்காவில் உள்ள யூதர்களின் மரபணுவுடன், ஹிட்லர் உறவினர்களின் மரபணு ஒத்துப் போனது.இதன் மூலம், ஹிட்லரின் 20 தலைமுறைக்கு முந்தைய மூதாதையர்கள் யூத இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. ஹிட்லரின் உறவினர்களின் மரபணு மாதிரிகளில், "அப்லாப்குரூப் இ1பி1பி' என்ற "ஒய்' குரோமோசோம் இருந்தது. பொதுவாக, இந்த குரோமோசோம் ஜெர்மானியர்களிடம் இருக்காது. இவை யூதர், அஸ்கென்சி இனத்தினர் மற்றும் மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, துனிசியா ஆகிய நாடுகளை சேர்ந்த வடக்கு ஆப்பிரிக்காவின் "பெர்பர்ஸ்' இனங்களில் இந்த குரோமோசோம் இருக்கும். எனவே, ஹிட்லரும் யூத இனத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
_________________________________________________________________________________________________
கொடுமையான சமூக விரோதச் செயல்
கொழும்பு நகரிலுள்ள பல உணவகங் களில் சில தினங்களுக்கு முன் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர்ப் பரிசோதனை நடத்தியிருக்கின்றார்கள். பல உணவகங்களில் மனித பாவனைக்கு உதவாத பண் டங்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித பாவனைக்கு உதவாத பண்டங்களை விற்பனை செய்த 39 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேறு சில உணவகங்களிலிருந்து சந்தேகத்துக்கு இடமான உணவு வகைகள் மேலதிக பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இப் பரிசோதனை முடிந்ததும், சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகு பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இடமுண்டு. மனித பாவனைக்கு உதவாதவை எனக் கண்டறியப்ப ட்ட உணவுப் பண்டங்களில் கொத்துரொட்டி வகை களே கூடுதலானவை. இவ்வாறான 400 கிலோ கொத் துரொட்டி வகைகள் அழிக்கப்பட்டுள்ளன. கொத்து ரொட்டி தயாரிப்பதற்கெனச் சிறியனவாக வெட்டப்பட்ட ரொட்டித் துண்டுகள் ஒரு வாரத்துக்கு மேலா கக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (மேலும்) 29.08.10
_________________________________________________________________________________________________
வடக்கு முஸ்லிம்கள் மீது காட்டப்படும் அக்கறை போதுமானதாக இல்லை-கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ்
- கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ் உடன் நேர்காணல் : இப்பத் அஸா
இலங்கையில் முஸ்லிம்கள் பல்வேறு ரீதியிலான பிளவுகளின் காரணமாக பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அரசியல் ரீதியிலான பிளவும் இஸ்லாமிய இயக்கங்களினால் தோன்றும் பிளவும் பிரதேச ரீதியிலான சிந்தனைப் போக்கும் கொண்ட தோற்றப்பாடுகளின் மூலமாக பிரச்சினைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் புரிந்துணர்வின்மையும் ஒற்றுமையின்மையுமேயாகும். முஸ்லிம்களின் அரசியல் ரீதியிலான பிளவு என்பது தேசிய ரீதியில் அடையாளம் காணக் கூடிய ஒன்று. தமிழ் -சிங்கள அரசியல்வாதிகள் தத்தமது சமுதாயத்திற்காக ஒன்றுபட்டு இயங்குகின்றார்கள். அதேபோன்று தத்தமது தேசிய நலனுக்காக இக் கட்சிக்காரர்கள் வேற்றுமைக்குள் ஒற்றுமைப்பட்டு செயற்படக் கூடிய நிலையில் உள்ளனர். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை எந்த விடயங்களிலும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்று பட்டுச் செயற்படும் சரித்திரம் கிடையாது. இது முஸ்லிம் அரசியலுக்கொரு சாபக்கேடு. பொது நோக்கத்திற்காக ஒன்றுபட்டு புதிய அணுகுமுறையுடன் செயற்படும் திறனும் விட்டுக் கொடுத்துச் செயற்படும் நல்ல மனப்பாங்கும் கொண்ட அரசியல் தலைமைகள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும். (மேலும்) 29.08.10
__________________________________________________________________________________________________
13 ஆணிகள், 5 ஊசிகள் ஆரியவதியின் உடலிலிருந்து அகற்றப்பட்டன இரு கரங்களிலும் இன்னமும் 6 ஊசிகள்
சவூதி அரேபியாவில் தொழில் வழங்கியவரால் உடலில் ஆணி ஏற்றப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மூலம் 13 ஆணிகளையும் 5 ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவிலிருந்து கடுமையான வலியுடன் நாடு திரும்பிய எல்.ஜி.ஆரியவதி என்ற இந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் பணியாற்றிய குடும்பத்தினர் தண்டனையாக ஆணிகளையும் ஊசிகளையும் சூடாக்கி தனது உடலில் ஏற்றியதாக அவர் கூறியிருந்தார். எக்ஸ்ரே மூலம் அவரின் உடலில் 24 ஆணிகளும் ஊசிகளும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஒரு அங்குலம் தொடக்கம் இரண்டு அங்குலம் வரையிலான நீளமுடையவையாக ஆணிகள் காணப்பட்டன. ஊசிகள் ஒரு அங்குல நீளமுடையவை. அப்பெண்ணின் கால்கள், நெற்றியிலிருந்து ஆணிகள்அகற்றப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது. இப்போது அவர் குணமடைந்து வருகிறார் என்று கம்புறுப்பிட்டிய மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் கீர்த்தி சத்தரசிங்க தெரிவித்தார். (மேலும்) 29.08.10
__________________________________________________________________________________________________
விம்பம் -2010
6ஆவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா
Vimbam - 6th International Tamil Short Film Festival
21 November 2010
தமிழ்நாட்டிலிருந்து பிரபல ஆவணப்பட இயக்குனர் அம்ஷன்குமார் வருகைதந்து சிறப்பிக்கிறார். தெரிவுசெய்யப்படும் சிறந்த கலைஞர்களுக்கும் சிறந்த படங்களுக்குமான 10விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. ஒருவர் எத்தனை படங்களும் போட்டிக்காக அனுப்பிவைக்கலாம். 20 நிமிடங்களுக்குக் குறைவான படங்கள் வரவேற்கத்தக்கது. டி வி டி வடிவில் பதிவுசெய்து ஒக்ரோபர் 20ந் திகதிக்கு முன்னர்
VIMBAM
No 4, Burges Road, Eastham, London E6 2BH, U.K.
என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள். போட்டிக்கு அனுப்பும் படங்களுடன் அதில் பங்குகொண்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோரது விபரங்களையும், படங்களையும் அனுப்பிவைக்க மறவாதீர்கள். ஒக்ரோபர் 20ந் திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் படங்கள் போட்டியில் இடம்பெறாது என்பதை அறியத்தருகிறோம். மேலதிக விபரங்கட்கு:
விம்பம்: (44)07956 490 694 - (44) 0208 470 7883 - (44)0208 471 5636
vimbam@aol.com
__________________________________________________________________________________________________
வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கி தவிக்கும் உலக முதலாளித்துவம் உலகமயம் தொடர முடியாது.
- இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் கொழும்பு மாநாட்டில் டி.கே.ரங்கராஜன் பேச்சு.
வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கியுள்ள உலக முதலாளித்துவம், கடந்த சில ஆண்டுகளில் நடை போட்ட உலகமய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர் பேசியதாவது: அண்டை நாடுகளான இலங்கையும், இந்தியாவும் பல நூற்றாண்டு களாகவே நெருக்கமான உறவுகளை கொண்டிருக்கின்றன. இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான காலனி ஆதிக்க வரலாற்றைக் கொண்டவை. போர்த்துக்கீசிய காலனி ஆதிக்கவாதிகள் முதலில் நம்மண்ணில் காலடி எடுத்து வைத்தனர்; பின்னர் பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகள் அவர்களை வெளியேற்றி விட்டு நம் நாடுகளை நீண்ட காலம் அவர்களின் ஆட்சிக்கு உட்படுத்தினர். விடுதலைக்கான நமது போராட்டங்கள் கூட பொதுத் தன்மைகளை கொண்டிருந்தன. இரண்டு போராட்டங்களும |